வடக்கு முதல்வர் இனவாதி என்பதை நான் நம்பவில்லை : மஹிந்த
அரசியல் கைதிகளை விடுதலை செய்ய தான் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.அரசியல் ரீதியாக அரசாங்கம் நீதிமன்றத்துக்கு அழுத்தம் கொடுத்து அவர்களை விடுதலை செய்வதையே தான் எதிர்ப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.மேலும் தற்போதைய அரசாங்கம் வடக்கு மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் தோல்வியடைந்துள்ளதாகவும் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.அத்துடன் வடக்கு முதல்வர் இனவாதி என்பதை தான் நம்பவில்லை எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போதே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு கருத்து வௌியிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply