வில்பத்து வர்த்தமானியை ஜனா­தி­பதி உடனடியாக வாபஸ் பெறவேண்டும் : முஜிபுர் ரஹ்மான்

1990 ஆம் ஆண்டு விடு­த­லைப்­பு­லி­க­ளினால் வடக்­கி­லி­ருந்து பல­வந்­த­மாக வெளியேற்­றப்­பட்ட முஸ்­லிம்­களின் கருத்­துக்­க­ளுக்கு செவி­சாய்க்­காது, வில்­பத்து வனம் தொடர்­பி­லான வர்த்­த­மா­னியில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கையொப்­ப­மிட்­டுள்ளார்.அவர் இன­வா­தி­க­ளுக்கு சார்­பாக ஒரு­த­லைப்­பட்­ச­மாக செயற்­பட்­டி­ருக்­கிறார். எனவே அவர் அதனை உட­ன­டி­யாக வாபஸ்­பெற வேண்டும் என கொழும்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் கோரிக்கை விடுத்­துள்ளார்.

இதே­வேளை, திட்­ட­மிட்டு யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்ட வடக்கு முஸ்­லிம்ளை மீள்­கு­டி­ய­மர்த்­தா­மை­யி­னா­லேயே இவ்­வா­றான பிரச்­சினை தோன்­றி­யி­ருப்­ப­தாக அவர் சுட்­டிக்­காட்­டினார்.

இது குறித்து முஜிபுர் ரஹ்மான் மேலும் குறிப்­பி­டு­கையில்,

மறிச்­சிக்­கட்டி, மாவில்லு, வெப்பல், விளாத்­திக்­குளம், பெரி­ய­மு­றிப்பு உள்­ள­டங்­கிய பகு­திகள் மக்கள் பூர்­வீ­க­மாக வாழ்ந்த பகு­தி­க­ளாகும். அதற்­கான ஆவ­ணங்கள் பலவும் அங்­குள்ள மக்­க­ளிடம் இருக்­கின்­றன. இது குறித்து ஜனா­தி­பதி பரி­சீ­லிக்­காது தீர்­மானம் எடுத்­தி­ருப்­பதும் மிகவும் தவ­றா­ன­தாகும். அவர் கையொப்­ப­மிட்ட வர்த்­த­மானி அறி­வித்­தலை வாபஸ்­பெற வேண்டும்

முஸ்­லிம்கள் வடக்­கி­லி­ருந்து விடு­தலை புலி­க­ளினால் பல­வந்­த­மாக வெளியேற்­றப்­பட்டு 27 வரு­டங்­க­ளா­கின்­றன. அத்­துடன் யுத்தம் நிறை­வ­டைந்து 8 ஆண்­டுகள் நிறை­வ­டைந்தும் இந்த முஸ்­லிம்­களின் மீள்­கு­டி­யேற்­றத்­திற்­கான எந்­த­வொரு திட்­டத்­தையும் மஹிந்த அர­சாங்­கமே இந்த நல்­லாட்சி அர­சாங்­கமோ முன்­வைக்­க­வில்லை.

முன்னாள் ஜனா­தி­ப­தி­யினால் நிய­மிக்­கப்­பட்ட கற்­றுக்­கொண்ட பாடங்கள் மற்றும் நல்­லி­ணக்­கத்­திற்­கான ஜனா­தி­பதி ஆணைக்­குழு (எல்.எல்.ஆர்.சி) யின் அறிக்­கையின் பிர­காரம் யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்ட மக்கள் தமது சொந்த இடத்தில் மீள்­கு­டி­யேற்­றப்­ப­ட­வேண்டும் என குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. எனவே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன எல்.எல்.ஆர்.சி. அறிக்­கை­யையும் மீறி­யி­ருக்­கிறார்.

அவர் இன­வா­திகள் தயா­ரித்து வழங்­கிய திட்­டத்தை அமுல்­ப­டுத்­து­வ­தற்கு எத்­த­னிக்­கிறார். இதனை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.

ஜனா­தி­பதி இன­வா­தி­களை அழைத்து அவர்­க­ளுடன் ஜனா­தி­பதி மாளி­கையில் கலந்­து­ரை­யா­டினார். ஆனால் 30 வருட யுத்­ததால் பாதிக்­கப்­பட்ட வடக்கு மாகாண முஸ்லிம் மக்­க­ளுடன் எவ்­வித கலந்­து­ரை­யா­டல்­க­ளையும் மேற்­கொள்­ள­வில்லை.

அவர்­களின் கருத்­துக்கள் தொடர்பில் ஆராய்­வ­தற்கும் ஜனா­தி­பதி முயற்­சிக்­க­வில்லை.

மாறாக, நாட்டில் இன­வா­தத்தை பரப்பி மற்­று­மொரு யுத்­தத்தை ஏற்­ப­டுத்த முயற்­சித்த கடும்­போக்குவாதி­களின் சதியில் ஜனா­தி­பதி சிக்­கி­யுள்ளார். அவர்­களின் திட்­டத்­திற்கு அடி­ப­ணிந்­தி­ருக்­கிறார். இது இன்­னு­மொரு பாரிய பிரச்­சி­னை­யையே தோற்­று­விக்கும்.

வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்களின் கருத்துக்கள் அறியப்பட வேண்டும். இப்பிரச்சினையை சுமுகமாகத் தீர்ப்பதற்கு ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்படவேண்டும். இதனை விஞ்ஞானபூர்வமாக தீர்க்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply