ரஷ்­யா­வி­லி­ருந்து யாரைத் திருப்­திப்­ப­டுத்­து­வ­தற்கு ஜனா­தி­பதி கையொப்­ப­மிட்டார் : ஏ.எச்.எம்.அஸ்வர்

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இலங்கை வர­லாற்றில் எப்­போதும் நடக்­காத வழி­மு­றை­யொன்­றினைப் பின்­பற்றி முஸ்­லிம்­களின் பூர்­வீகக் காணி­களை வன பிர­தே­சங்­க­ளாக பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யுள்ளார்.ஜனா­தி­ப­தியின் செயற்­பாடு இந்தப் பிர­தே­சத்தை அவர் ரஷ்­யாவின் கொல­னி­யாக மாற்­றப்­போ­கி­றாரா என்று எண்ணத் தோன்­று­கி­றது என முஸ்லிம் முற்­போக்கு முன்­ன­ணியின் செய­ல­தி­பரும் முன்னாள் அமைச்­ச­ரு­மான ஏ.எச்.எம்.அஸ்வர் தெரி­வித்தார்.

வில்­பத்து வன பகு­தி­யுடன் இணைந்து நான்கு பகு­தி­களைப் பாது­காக்­கப்­பட்ட வன பிர­தே­சங்­க­ளாக வர்த்­த­மானி
அறி­வித்தல் மூலம் ஜனா­தி­பதி பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யுள்­ளமை தொடர்பில் வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் அவர் இவ்­வாறு குறிப்­பிட்­டுள்ளார்.

அவர் தொடர்ந்தும் தெரி­வித்­துள்­ள­தா­வது;

ஜனா­தி­பதி குறிப்­பிட்ட வர்த்­த­மானி அறி­வித்­தலில் ரஷ்ய விஜ­யத்தின் போதே அங்­கி­ருந்து கையொப்­ப­மிட்­டுள்ளார். ரஷ்­யா­வி­லி­ருந்து யாரைத் திருப்­திப்­ப­டுத்­து­வ­தற்கு ஜனா­தி­பதி கையொப்­ப­மிட்டார் என்­பதை அவரே வெளிப்­ப­டுத்த வேண்டும்.

ஜனா­தி­ப­தியின் வர்த்­த­மானி அறி­வித்­த­லினால் அப்­பாவி முஸ்­லிம்கள் பாதிக்­கப்­பட்­டுள்­ளார்கள். ஜனா­தி­ப­தியின் இந்த தீர்­மா­னத்தை முஸ்லிம் அரசியல் தலைவர்கள் அனைவரும் கொள்கை வேறுபாடுகளை மறந்து எதிர்க்க வேண்டும்.

இவ்விவகாரத்தில் அனைவரும் ஒன்றுபட்டு குரல் கொடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply