தொடரும் தீவிரவாத அச்சுறுத்தல்: சிறப்பு பயங்கரவாத தடுப்புப் படையை உருவாக்கியது பிரான்ஸ்

பிரான்ஸ் நாட்டில் தீவிரவாத அச்சுறுத்தல் தொடர்ந்து இருப்பதால், அதை முறியடிப்பதற்காக அதிபரின் கட்டுப்பாட்டில் இயங்கும் வண்ணம் சிறப்பு படை ஒன்றை அந்நாட்டு அரசு உருவாக்கியுள்ளது. ஐரோப்பிய நாடான பிரான்சில் கடந்த இரண்டாண்டுகளில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல்களில் சுமார் 230 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். பெரும்பாலான தாக்குதல்கள் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தால் நடத்தப்பட்டுள்ளன. இதனால், புதிதாக சிறப்பு தீவிரவாத தடுப்புப்படையை உருவாக்க பிரான்ஸ் அரசு முடிவெடுத்தது.

 

அதன்படி, அதிபரின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் வண்ணம் இந்த படை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உளவு அமைப்புகளின் பங்களிப்பில் இந்த சிறப்பு படை இயங்கும் எனவும், மற்ற படைகளை ஒருங்கினைக்கும் விதமாகவும் இந்த சிறப்பு படை இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

புதிதாக அதிபராக பொறுப்பேற்றுள்ள மேக்ரானின் யோசனையில் இந்த சிறப்பு படை உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இருதினங்களுக்கு முன்னர் நோட்ரே தாமே நகரில் போலீசார் மீது சுத்தியலால் தாக்குதல் நடத்திய நபர் குறித்த தகவல்களும் வெளியிடப்பட்டுள்ளது.

 

அல்ஜீரியா நாட்டிலிருந்து பிரான்சுக்கு குடியேறிய பரீத் இந்த தாக்குதலை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மெட்ஸ் பல்கலைக்கழகத்தில் ஆய்வுப்படிப்பு பயிலும் பரீத், சிரியாவில் இயங்கும் ஐ.எஸ் இயக்கத்தினருடன் தொடர்பில் இருந்து, அவர்களின் உத்தரவுக்கேற்ப இந்த தாக்குதல்களை நடத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply