பிரதமர் மஹிந்தவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிப்பு

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்று சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.மக்கள் விடுதலை முன்னணி சார்பில் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிக்கப்பட்டதாக அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சரவைக்கு எதிரான குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிக்கப்பட்டுள்ளது.இதேவேளை நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு இன்றைய தினமே இடம்பெறும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply