உயிர்த்தெழுந்த ஞாயிறு தாக்குதல் : 13 நாடுகளை சேர்ந்தோர் உயிரிழப்பு

உயிரிழந்தோரில் 36 வெளிநாட்டவர்களின் சடலங்கள் அடையாளம் காணப் பட்டிருப்பதாக வெளிநாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.

இவர்கள் சீனா, இந்தியா, பங்களாதேஷ், டென்மார்க், ஜப்பான், நெதர்லாந்து, போர்த்துக்கல், சவூதிஅரேபியா, பிரான்ஸ், துருக்கி, பிரிட்டன், அமெரிக்கா மற்றும் அவுஸ்ரேலியா நாடுகளை சேர்ந்தவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இறந்தவர்களில் 11பேர் இந்தியர்கள் பிரிட்டனை சேர்ந்த 6 பேரும் டெர்மார்கை சேர்ந்த மூவரும் இதில் அடங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காயங்களுக்குள்ளானவர்களும் 12 வெளிநாட்டவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 14 பேர் காணாமல் போயுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply