10 ஆண்டுகளில் இலங்கை சிறையிலிருந்து 3,697 மீனவர்கள் மீட்பு: இந்திய மத்திய அரசு

Saturday, March 29th, 2025 at 7:59 (SLT)

கடந்த 10 ஆண்டுகளில் இலங்கை கடற்படையினரால் சிறைவைக்கப்பட்டிருந்த 3,697 இந்திய மீனவா்கள் மீட்கப்பட்டதாக இந்திய மத்திய அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

மேலும் வாசிக்க >>>

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

Saturday, March 29th, 2025 at 7:56 (SLT)

மேல், சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேலும் வாசிக்க >>>

மியான்மர், தாய்லாந்தை உலுக்கிய நிலநடுக்கம்: உயிரிழப்பு எண்ணிக்கை 107 ஆக உயர்வு : 350 பேர் படுகாயம்

Friday, March 28th, 2025 at 21:44 (SLT)

இந்திய நேரப்படி இன்று மதியம் மியான்மர் மற்றும் தாய்லாந்தில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7 புள்ளிகளுக்கு மேல் பதிவானது. இந்தியாவின் கொல்கத்தா, மணிப்பூர் மற்றும் சீனா, வங்கதேச பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டது.

மேலும் வாசிக்க >>>

சோடாவிற்குள் மண்ணெண்ணையா? புதுக்குடியிருப்பில் சோடாவினை கொள்வனவு செய்தவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி

Friday, March 28th, 2025 at 8:45 (SLT)

புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதி விற்பனை நிலையம் ஒன்றில் நபர் ஒருவர் சோடவினை கொள்வனவு செய்த போது சோடாவிற்குள் மண்ணெண்ணை மணம் இருப்பதாக முறைப்பாடு வழங்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் ஒன்று வியாழக்கிழமை (27) இடம்பெற்றுள்ளது.

மேலும் வாசிக்க >>>

யாழில் கஞ்சா செடி வளர்த்த நபர் கைது

Friday, March 28th, 2025 at 8:41 (SLT)

யாழ்ப்பாணத்தில் கஞ்சா செடி வளர்த்ததாக சந்தேகிக்கப்படும் ஒருவர் நேற்று (27) கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில், புன்னாலைக்கட்டுவான் பகுதியைச் சேர்ந்த 42 வயது நபர் இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டார்.

மேலும் வாசிக்க >>>

ஹங்குரன்கெத்த பிரதேச சபையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இடை நிறுத்திவைக்க “ரிட் மனு“ தாக்கல்

Thursday, March 27th, 2025 at 9:06 (SLT)

ஹங்குரன்கெத்த பிரதேச சபைக்கு நடத்தப்பட உள்ள தேர்தலை இடை நிறுத்திவைக்கும் படி ‘ரிட் மனு ‘ ஒன்று தாக்கல் செய்யப்படுள்ளது.எதிர்வரும் தேர்தலில் போட்டியிட உள்ள சுயேட்சைக்குழு ஒன்றின் தலைவரான ஜே.எம். ஜயரத்ன என்பவரே மேற்படி வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

தென்கொரியாவில் காட்டுத் தீ : அங்குள்ள இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

Thursday, March 27th, 2025 at 9:02 (SLT)

தென்கொரியாவின் தென்கிழக்கு பிராந்தியத்தில் பரவிய காட்டுத்தீயில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்வடைந்துள்ளது. தென்கொரியாவிலுள்ள இலங்கைத் தூதரகம், காட்டுத் தீ பரவும் பகுதிகளுக்கு செல்வதைத் தவிர்க்குமாறு அங்குள்ள இலங்கையர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. 

மேலும் வாசிக்க >>>

மொரட்டுவையில் ரயில்வே மேம்பாலம் இடிந்து விழுந்தது

Thursday, March 27th, 2025 at 8:57 (SLT)

மொரட்டுவையில் உள்ள எகொட உயன ரயில் நிலையத்தில் திடீரென மேம்பாலம் ஒன்று இடிந்து விழுந்ததுள்ளது.இருப்பினும், இடிந்து விழுந்ததில் தெய்வாதினமாக யாரும் விபத்தில் சிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

முல்லைத்தீவில் 239 கசிப்பு விற்பனையாளர்கள் தடுக்க கடுமையான நடடிக்கை தேவை : ரவிகரன் எம்.பி.

Thursday, March 27th, 2025 at 8:52 (SLT)

முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான், மாந்தைகிழக்கு, துணுக்காய் ஆகிய ஐந்து பிரதேசசெயலாளர் பிரிவுகளிலும் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபடுபவர்களாக 239பேர் இனங்காணப்பட்டுள்ளதாகவும், வெலிஓயா பிரதேசசெயலாளர் இதுதொடர்பில் தரவுகளைத் திரட்டும்போது அச்சுறுத்தல்களுக்கு உள்ளானமையால், இதுதொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்கமுடியவில்லையெனவும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு க் குழுக்கூட்டத்தில் 26.03.2025 இன்று சுட்டிக்காட்டப்பட்டது.

மேலும் வாசிக்க >>>

காலனித்துவ ஆட்சி காலத்தில் இழைக்கப்பட்ட அநீதிகளிற்கு மன்னிப்பு கோராத பிரிட்டன் இலங்கையர்களிற்கு எதிராக தடைகளை விதிக்கின்றது : வசந்த கரனாகொட

Thursday, March 27th, 2025 at 8:47 (SLT)

இலங்கையிலும் இந்தியாவிலும் பிரிட்டனின் காலனித்துவ ஆட்சியாளர்கள் இழைத்த அநீதிகள் அட்டுழியங்களிற்கு இன்னமும் நீதி வழங்கப்படாத நிலையில் பிரிட்டன் இலங்கைக்கு எதிராக மனித உரிமைதடைகளை விதிக்கின்றது என பிரிட்டன் தடைவிதித்துள்ள நால்வரில் ஒருவரான முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரனாகொட தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

விபத்தில் சிக்கிய குடும்பப்பெண் யாழ். போதனா வைத்தியசாலையில் உயிரிழப்பு

Thursday, March 27th, 2025 at 8:42 (SLT)

மகளை கல்வி நிலையத்திற்கு அழைத்துச் சென்ற குடும்பப்பெண் ஒருவர் மகேந்திரா ரக வாகனம் மோதியதில் செவ்வாய்க்கிழமை (25) இரவு உயிரிழந்துள்ளார். 31ஆம் கட்டை, முழங்காவில் பகுதியைச் சேர்ந்த கமல் நகுலமலர் (வயது 44) என்ற 3 பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

யாழில் அனைத்து சபையிலும் வென்று இருப்போம் 09 சபைகளை நிராகரித்து விட்டார்கள் : சித்தார்த்தன்

Wednesday, March 26th, 2025 at 9:24 (SLT)

யாழ்ப்பாணத்தில் எல்லா சபைகளிலும் வெல்லக்கூடிய வெற்றி வாய்ப்புகள் இம்முறை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு உள்ள நிலையில் சில சபைகளின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு எதிராக உச்ச நீதிமன்றில் வழக்கு தொடரவுள்ளதாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணைத்தலைவர் சித்தார்த்தன் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

யாழ்ப்பாணத்தில் அதீத போதை காரணமாக இளைஞன் ஒருவர் உயிரிழப்பு

Wednesday, March 26th, 2025 at 9:22 (SLT)

யாழ்ப்பாணத்தில் அதீத போதை காரணமாக இளைஞன் ஒருவர் திங்கட்கிழமை (24) உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் புறநகர் பகுதியை சேர்ந்த 30 வயதுடைய இளைஞன் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளை அதீத அளவில் நுகர்ந்த நிலையில் , உயிரிழந்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

வவுனியாவில் கிணற்றில் இருந்து இளம் யுவதியின் சடலம் மீட்பு

Wednesday, March 26th, 2025 at 9:19 (SLT)

வவுனியா, கலாபோகஸ்வேவ பகுதியில் கிணற்றில் இருந்து இளம் யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. வவுனியா, கலாபோகஸ்வேவ பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் பெண் ஒருவர் வீழ்ந்து இருந்ததை அவதானித்த ஊர் மக்கள் பொலிசாருக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் பெண் ஒருவரின் சடலத்தை மீட்டதுடன், திடீர் மரண விசாரணை அதிகாரி க.கரிபிரசாத் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டிருந்தார்.

மேலும் வாசிக்க >>>

பாலின சமத்துவத்தை உறுதி செய்வதற்கும் பாலின அடிப்படையிலான வன்முறையை நீக்குவதற்கும் THRIVE போன்ற கூட்டு முயற்சிகள் அவசியம் : பிரதமர்

Wednesday, March 26th, 2025 at 9:16 (SLT)

இலங்கை போன்ற நாடுகளுக்கு, பாலின சமத்துவத்தை உறுதி செய்வதற்கும் பாலின அடிப்படையிலான வன்முறையை நீக்குவதற்கும் THRIVE போன்ற கூட்டு முயற்சிகள் அவசியம் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;

மேலும் வாசிக்க >>>