21 வயதுடைய சோபிகா, யாழ் பல்கலைக்கழகத்தின் 3 ஆம் வருட மாணவி, மாதவிடாய்த் துவாய்களின் விலையேற்றத்தால் , பாதிக்கப்பட்டதாகக் கூறுகிறார். ” நாங்கள் மாதவிடாய் நாட்களிலும் தொடர்ந்து 5 மணித்தியாலங்கள் வகுப்பில் இருக்க நேரிடும், இதனால் தரமான மாதவிடாய்த் துவாய்களைப் பாவிக்க வேண்டும். அதன் விலை 600 ரூபா. வெறும் 8 துவாய்கள் மட்டுமே ஒரு பெட்டியில் இருக்கிறது. மாதாந்தம் இதனைக் கொள்வனவு செய்வதற்கு 1400 ரூபா தேவைப்படுகிறது. இன்றைய காலப்பகுதியில் இது பெரிய தொகை “என்றார். இவ்வாறு மாதவிடாய் கால சவால்களால்ப் பாதிக்கப்படும் பெண்கள் நாட்டில் அதிகரித்துள்ளனர். மாதவிடாய்; துவாய்களின் விலையேற்றம்,போதிய தெளிவின்மை, பாரம்பரிய நம்பிக்கைகள் போன்றவை மாதவிடாய் வறுமைக்கான காரணமாக உள்ளன.
மேலும் வாசிக்க >>>