தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நிராகரித்திருப்பதுடன் உள்ளகப்பொறிமுறை மாத்திரமே கருத்திற்கொள்ளப்படவேண்டும் என வலியுறுத்தியிருக்கிறது. இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதற்கான முன்மொழிவை உள்ளடக்கிய புதிய பிரேரணையொன்றைக் கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகளிடம் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் வாசிக்க >>>













