பறிமுதல் செய்யப்பட்ட இலங்கை பெண்ணின் தாலி மீள ஒப்படைப்பு

Sunday, March 2nd, 2025 at 11:03 (SLT)

இலங்கை பெண் ஒருவரிடம் தாலிக்கொடியை பறிமுதல் செய்த சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள், நீதிமன்ற உத்தரவிற்கு அமைய அப்பெண்ணிடம் தாலியை மீள ஒப்படைத்துள்ளனர். இலங்கையைச் சேர்ந்த பெண்ணொருவர் கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பரில் திருமணம் முடிந்து, குடும்பத்தினருடன் சென்னைக்கு சென்றுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

புனித ரமலான் நோன்பு காலம் இன்று முதல் ஆரம்பம்

Sunday, March 2nd, 2025 at 11:00 (SLT)

புனித ரமலான் நோன்பு காலம் இன்று (02) முதல் ஆரம்பமாகிறது. அதன்படி, இன்று முதல் ஒரு மாத காலத்திற்கு முஸ்லிம் மக்கள் நோன்பு நோற்பார்கள். நேற்று (01) இரவு புதிய பிறை தென்பட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தேசிய ஒருங்கிணைப்பு பிரதியமைச்சர் மொஹமட் முனீர் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

புதிய அரசியலமைப்பு வெகுவிரைவில் உருவாக்கப்படும் தமிழ் மக்கள் வழங்கியுள்ள ஆணையை பாதுகாப்போம் : நீதி அமைச்சர்

Sunday, March 2nd, 2025 at 9:56 (SLT)

வட, கிழக்கு மாகாண மக்களின் அடிப்படை பிரச்சினைகளை நாங்கள் நன்கு அறிவோம். சிறந்த திட்டமிடலுடன் புதிய அரசியலமைப்பு வெகுவிரைவில் உருவாக்கப்படும். தமிழ் மக்கள் வழங்கியுள்ள ஆணையை பாதுகாப்போம். வங்குரோத்து அரசியலுக்காக இனவாதம், மதவாதம் மீண்டும் தலைதூக்க இடமளிக்க போவதில்லை என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடுகள் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜப்பான் விஜயம்

Sunday, March 2nd, 2025 at 9:52 (SLT)

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜப்பானுக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளார்.இந்த விஜயத்தில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேராத் உட்பட அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க கோரி காத்திருப்பு போராட்டம்

Sunday, March 2nd, 2025 at 9:48 (SLT)

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், கைப்பற்றப்பட்ட படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் தங்கச்சிமடத்தில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் வாசிக்க >>>

புதிய கடவுச்சீட்டில் பாரிய குறைபாடுகள்: மேலதிக செலவும் ஏற்பட்டுள்ளதாக முஜிபுர் எம்.பி குற்றச்சாட்டு

Saturday, March 1st, 2025 at 7:19 (SLT)

அரசாங்கம் தற்போது விநியோகிக்கும் புதிய வெளிநாட்டு கடவுச்சீட்டில் பாரிய குறைபாடுகள் இருப்பதுடன் பழைய கடவுச்சீட்டுக்கு செலவழித்ததைவிட மேலதிகமாக 6,997 ரூபா செலுத்த வேண்டி இருக்கிறதென முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

தேசிய கண் வைத்தியசாலையில் நோயாளர்கள் பெரும் அவலம் நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை

Saturday, March 1st, 2025 at 7:15 (SLT)

தேசிய கண் வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதற்காக வரும் நோயாளர்கள் பல அசௌகரியங்களுக்கு முகங்கொடுப்பதுடன், பெரும் சிரமத்துக்கு மத்தியில் சிகிச்சைகளைப் பெறுவதாக நோயாளர்கள் கடும் விசனம் வெளியிட்டுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்க அரசாங்கம் தயார் : ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க

Saturday, March 1st, 2025 at 7:08 (SLT)

புதிய சட்டக் கட்டமைப்பின் மூலம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். வரலாற்றில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இனவாதம் மற்றும் அடிப்படைவாதம் அமைந்திருந்தது என்றும், இலங்கையில் மீண்டும் இனவாதம் மற்றும் அடிப்படைவாதம் தலைதூக்க தற்போதைய அரசாங்கம் அனுமதிக்காது என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

மேலும் வாசிக்க >>>

ஜம்மு காஷ்மீர் விடயத்தில் பாகிஸ்தான் தொடர்ந்து பொய்களை பரப்புகிறது :ஐநா கூட்டத்தில் இந்தியா கண்டனம்

Saturday, March 1st, 2025 at 7:01 (SLT)

தோல்வி அடைந்த நாடான பாகிஸ்தான் ஜம்மு காஷ்மீர் விஷயத்தில் தொடர்ந்து பொய்களை பரப்பி வருகிறது என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சிலில் இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

இவ்வாண்டின் இதுவரையில் அரிசி தொடர்பில் 1,400 சோதனைகள்

Saturday, March 1st, 2025 at 6:58 (SLT)

ஜனவரி மாத தொடக்கத்தில் இருந்து அரிசி தொடர்பான 1,400 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யப்பட்ட 400 சோதனைகள் நடந்துள்ளதாக அதிகாரசபை கூறுகிறது.

மேலும் வாசிக்க >>>

ராஜபக்‌ஷவினரின் ஊழல் மோசடிகளுக்கு தற்போதைய அரசாங்கமும் பொறுப்புக்கூற வேண்டும் : முஜிபுர் ரஹ்மான்

Friday, February 28th, 2025 at 8:07 (SLT)

மக்கள் விடுதலை முன்னணி 2005இல் எடுத்த தவறான தீர்மானங்களின் பெறுபேறாகவே தற்போது ராஜபக்‌ஷவினரின் மோசடிகள் தொடரபில் கதைக்க வேண்டியுள்ளது. அதனால் அவர்களின் ஊழல் மோசடிகளுக்கு தற்போதைய அரசாங்கமும் பொறுப்புக்கூற வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

காணாமல்போனோர் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை காணாமலாக்கப்பட்டுள்ளது : நளிந்த ஜயதிஸ்ஸ

Friday, February 28th, 2025 at 8:02 (SLT)

2016 ஆம் ஆண்டு காலம் முதல் பெரும்பாலான விசாரணை ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டன. அவற்றில் 14 ஆணைக்குழுக்கள் பிரதானவையாக காணப்படுகின்றன. இவற்றுக்காக 5301 இலட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. ஆனால் அறிக்கைகள் கிடைக்கப்பெறவில்லை. காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டு அதற்காக 144 இலட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. ஆனால் அறிக்கை காணாமலாக்கப்பட்டுள்ளது என ஆளும் தரப்பின் பிரதம கொறடாவான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

ட்ரம்ப் மற்றும் செலன்ஸ்க்கி இடையே இன்று சந்திப்பு : கனிம ஒப்பந்தம் கைச்சாத்தாகுமா?

Friday, February 28th, 2025 at 7:52 (SLT)

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடோமிர் செலென்ஸ்கி இடையேயான சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ட்ரம்பின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் வெள்ளை மாளிகையில் நேற்று முன்தினம் புதன்கிழமை இடம்பெற்ற நிலையில் இதன்போது
பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

மேலும் வாசிக்க >>>

நேபாளத்தை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Friday, February 28th, 2025 at 7:48 (SLT)

நேபாளத்தில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.தேசிய நிலநடுக்க கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம், காத்மாண்டுவிலிருந்து கிழக்கே சுமார் 65 கி.மீ தொலைவில் உள்ள சிந்துபால்சௌக் மாவட்டத்தின் பைரவ்குண்டாவில் நிலநடுக்கத்தின் மையப்பகுதி இருந்ததை உறுதிப்படுத்தியது.

மேலும் வாசிக்க >>>

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற மகா சிவராத்திரி நிகழ்வு : பல இலட்சக்கணக்கான சிவ பக்தர்கள் பங்கேற்பு

Thursday, February 27th, 2025 at 8:30 (SLT)

வரலாற்றுப் புகழ் பெற்ற நாயன்மார்கள் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றான மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான மகா சிவராத்திரி நிகழ்வு புதன்கிழமை (26) இடம்பெற்று வருகின்ற நிலையில் உலகம் முழுவதும் இருந்து பல லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் நேர்த்தி கடன்களை செலுத்த வருவதுடன் வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் வாசிக்க >>>