புலிகள் தலைவருடன் எடுத்த படம் எடிட் செய்யப்பட்டதா? சீமான் ஆவேசம்

Saturday, January 25th, 2025 at 8:14 (SLT)

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழீழ விடுதலை புலிகள் தலைவருடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை எடிட் செய்து கொடுத்ததே நான்தான் என்று இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் கூறிய தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சீமானின் புகைப்படம் குறித்த ஆதாரத்தை வெளியிட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கூறி வந்தனர்.

மேலும் வாசிக்க >>>

சேருவில – தங்கநகர் பகுதியில் நிறுத்தியிருந்த டிமோ பட்டா மீது வேன் மோதி விபத்து

Saturday, January 25th, 2025 at 7:00 (SLT)

சேருவில – தங்கநகர் பகுதியில் நிறுத்தியிருந்த டிமோ பட்டா வாகனத்துடன் வேன் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ் விபத்து சம்பவம் வெள்ளிக்கிழமை (24) மாலை இடம் பெற்றுள்ளது.

மேலும் வாசிக்க >>>

வரலாற்றில் முதன்முறையாக  பாராளுமன்றத்தில் கொண்டாடப்பட்ட தைப்பொங்கல் விழா

Saturday, January 25th, 2025 at 6:56 (SLT)

தைப்பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில் இலங்கை பாராளுமன்ற வளாகத்தில் தைப்பொங்கல் தின நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை வைபவரீதியாக சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் இடம்பெற்றது. வரலாற்றில் முதன்முறையாக இலங்கை பாராளுமன்றத்தினால் கொண்டாடப்பட்ட தைப்பொங்கல் தினமாக இதுகருதப்படுகிறது.

மேலும் வாசிக்க >>>

அதானியின் காற்றாலை திட்டம் இரத்து செய்யப்படவில்லை

Saturday, January 25th, 2025 at 1:05 (SLT)

மன்னார் மற்றும் பூநகரியில் அமையவுள்ள அதானியின் 484 MW காற்றாலை மின் திட்டங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளிவரும் செய்திகள் தவறானவை என அதானி குழுமம் தெரிவித்துள்ளது. விசேட ஊடக அறிக்கை ஒன்றை வௌியிட்டு அதன் பேச்சாளர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

மன்னாரில் காற்றாலை மின்திட்டம் அதானிக்கு வழங்கிய அனுமதி இரத்து

Friday, January 24th, 2025 at 13:03 (SLT)

மன்னார் பூநகரி காற்றாலை மின்திட்டத்தை முன்னெடுப்பதற்கு, இந்தியாவின் அதானி குழுமத்திற்கு கடந்த வருடம் அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் வழங்கிய அனுமதியை அமைச்சரவை இரத்து செய்துள்ளது என தெரியவருகின்றது.

மேலும் வாசிக்க >>>

யாழ்.கலாசார மையத்தின் பெயர் நாளுக்கு நாள் மாறும் பெயரால் பொதுமக்கள் கடும் விசனம்

Friday, January 24th, 2025 at 12:59 (SLT)

இந்திய நிதியுதவியில் யாழ்ப்பாணத்தில் கட்டப்பட்டுள்ள யாழ்ப்பாணம் கலாசார மண்டபம் தற்போது மூன்றாவது முறையாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி குறித்த மண்டபம், தற்போது யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு, பெயர் பலகை பொருத்தப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

பெண்களை தாக்கி தொலைபேசியை கொள்ளையடித்த இருவர் கைது

Friday, January 24th, 2025 at 9:13 (SLT)

வவுனியா – ஓமந்தை பகுதியில் நேற்று (23) முற்பகல் பெண்களை வழிமறித்து தாக்கிவிட்டு, அவர்களின் கையடக்க தொலைபேசியை பறித்துச் சென்ற இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

உள்நாட்டு துப்பாக்கிகளுடன் இரு சந்தேக நபர்கள் கைது

Friday, January 24th, 2025 at 8:07 (SLT)

கிரிபாவ, சங்கப்பாலய வெல்யாய பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் 48 வயதான கல்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய நேற்று வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போதே குறித்த நபர் கைதாகியுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான உணவு விலையை 450 ரூபாவில் இருந்து 2000 ரூபாவாக உயர்த்த பாராளுமன்ற பராமரிப்புக் குழு தீர்மானம்

Friday, January 24th, 2025 at 8:01 (SLT)

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான உணவு விலையை 450 ரூபாவில் இருந்து 2000 ரூபாவாக உயர்த்துவதற்கு பாராளுமன்ற பராமரிப்புக் குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

சுவாசநோய் தொடர்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு : வைத்திய நிபுணர் ஆஷா சமரநாயக்க

Friday, January 24th, 2025 at 7:55 (SLT)

வைரஸ் பரவல் அதிகரித்துள்ள இக்காலப்பகுதியில் ஆஸ்துமா நோய் மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளமையால் ஆஸ்துமா நோயாளர்கள் மற்றும் ஆஸ்துமா நோய்க்கு ஆளான சிறுவர்கள் குறித்தும் பெற்றோர் அவதானத்துடன் செயல்படுவதுடன் நோய் தீவிரமடையும் பட்சத்தில் உடனடியாக வைத்தியசாலையை நாடுமாறு களுபோவில போதனா வைத்தியசாலையின் சுவாச நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் ஆஷா சமரநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

இலங்கையின் இன்றைய வானிலை நிலவரம்

Friday, January 24th, 2025 at 7:50 (SLT)

ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் அம்பாறை , மட்டக்களப்பு, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார்.

மேலும் வாசிக்க >>>

கிரேன்பாஸில் பொலிஸாரின் உத்தரவை மீறிச் சென்ற கார் மீது துப்பாக்கிச்சூடு

Friday, January 24th, 2025 at 7:44 (SLT)

கிரேன்பாஸில் 23ஆம் திகதி மாலை காவல்துறையினரின் உத்தரவைப் பின்பற்றாமல் ஓட்டிச் சென்ற கார் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். குறித்த காரை கிராண்ட்பாஸ் காவல் பிரிவில் ஆய்வுக்காக நிறுத்த உத்தரவிடப்பட்டதாகவும், ஆனால் அது தொடர்ந்து சென்றதால் பின்தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

தேசிய பொலிஸ் ஆணைக்குழு அதிகாரிகளுக்கும் ஜனாதிபதி அநுரவுக்குமிடையில் விசேட கலந்துரையாடல்

Thursday, January 23rd, 2025 at 12:57 (SLT)

இக்கலந்துரையாடலில் பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸில் சில இடமாற்றங்களை மேற்கொள்ள பொலிஸ் ஆணைக்குழு தயக்கம் காட்டுவதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அண்மையில் மக்கள் சந்திப்பொன்றில் குற்றஞ்சாட்டினார்.

மேலும் வாசிக்க >>>

50 மெட்ரிக் தொன் பேரீச்சம்பழங்கள் சவுதி நன்கொடை

Thursday, January 23rd, 2025 at 12:52 (SLT)

எதிர்வரும் ரமழான் நோன்பு காலத்தை முன்னிட்டு சவுதி அரேபியா 50 மெட்ரிக் தொன் பேரீச்சம்பழங்களை இம்முறை நன்கொடையாக வழங்கியுள்ளது.பேரீச்சம்பழங்கள் நாட்டுக்கு கிடைத்துள்ளதாகவும் அவற்றை பள்ளிவாசல்களுக்கு விநியோகிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படுமென தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் கூறினார்.


இந்தியாவுடனான பாலம் அமைப்பது தொடர்பில் அரசங்கத்துக்கு இணக்கமா இல்லையா என எங்களுக்கு தெரியாது : ரிஷாத் பதியுதீன்

Thursday, January 23rd, 2025 at 12:49 (SLT)

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பாலம் அமைப்பது தொடர்பில் அரசங்கம் எந்த இணக்கப்பாடும் காணப்பட்டதாக தெரியவில்லை. கடந்த அரசாங்கங்கள் இது தொடர்பில் இணக்கப்பாடு கண்டபோதும் அது கைகூடவில்லை. அதனால் பாலம் அமைக்கும் திட்டம் தற்போது கைவிடப்பட்டதா அல்லது இந்த அரசங்கத்துக்கு அது தொடர்பில் இணக்கம் இல்லையா என எங்களுக்கு தெரியாது என ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>