சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஆடு மற்றும் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது

Thursday, January 23rd, 2025 at 12:45 (SLT)

ஆடு மற்றும் மோட்டார் சைக்கிள் போன்றவற்றை மருதமுனை பகுதியில் களவாடி சம்மாந்துறை பகுதியில் விற்பனை செய்ய வருகை தந்த சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

இந்து மதத்தை இழிவுபடுத்திய அர்ச்சுனா வலுக்கும் கண்டனம்

Wednesday, January 22nd, 2025 at 13:33 (SLT)

நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா இந்து மதத்தை இழிவுபடுத்தி முகநூலில் பதிவிட்டமைக்கு கண்டனம் தெரிவிப்பதாக கல்குடா வலய சைவ குருமார் சங்கத்தின் உப தலைவர் சிவஸ்ரீ சிவரேகன் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

IMF ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய அரசாங்கம் திட்டம்

Wednesday, January 22nd, 2025 at 13:28 (SLT)

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக நிதி பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்துள்ளார்.நேற்றைய நாடாளுமன்ற அமர்வின் போது அவர் இது தொடர்பில் கருத்து வெளியிட்டார்.

மேலும் வாசிக்க >>>

மாணவி கடத்தல் பொலிஸ் பொறுப்பதிகாரி இடைநீக்கம்

Wednesday, January 22nd, 2025 at 13:25 (SLT)

தவுலகல, ஹபுகஹயட பகுதியில் 18 வயது பாடசாலை மாணவி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிஸார் முறையாகச் செயற்படவில்லை என்ற குற்றச்சாட்டில் பொலிஸ் அதிகாரி ஒருவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் இருவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

வாழைச்சேனையில் சகோதரனை குத்தி க்கொன்ற சகோதரன் தலைமறைவு

Wednesday, January 22nd, 2025 at 13:23 (SLT)

கத்திக் குத்துக்குக்கு இலக்காகிய நிலையில் நபர் ஒருவர் மரணமடைந்துள்ளார். இந்தச் சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துறைச்சேனை பகுதியில் புதன்கிழமை (22) காலை இடம்பெற்றுள்ளது.

மேலும் வாசிக்க >>>

மட்டக்களப்பில் சீரற்ற காலநிலையால் ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு

Wednesday, January 22nd, 2025 at 13:21 (SLT)

மட்டக்களப்பு மாவட்டத்தில் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் 3737 குடும்பங்களைச் சேர்ந்த 11,971 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 921 பேர் 9 முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.சீரற்ற காலநிலையால் 17 வீடுகள் பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பல ஆயிரக்கணக்காண ஏக்கர் வேளாண்மை நீரில் மூழ்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

ரெலோ செல்வம் அடைக்கலநாதனின் கடவுச்சீட்டு விவகாரம்

Wednesday, January 22nd, 2025 at 13:18 (SLT)

கடவுச்சீட்டை நீதிமன்றில் ஒப்படைக்குமாறும், நீதிமன்ற அனுமதி பெற்றே வெளிநாடு செல்ல முடியும் எனவும் அனுராதபுர மேல் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளதாக ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

குறிஞ்சாக்கேணி பாலத்தின் நிர்மாண பணிகள் மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை

Wednesday, January 22nd, 2025 at 13:13 (SLT)

கிண்ணியா – குறிஞ்சாக்கேணி பாலத்தின் நிர்மாண பணிகளை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதற்காக 10.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் புதிய வாகனங்களின் விலை குறித்து அரசு வெளியிட்ட அறிவிப்பு

Wednesday, January 22nd, 2025 at 13:11 (SLT)

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் புதிய வாகனங்களின் விலை தற்போதைய, பயன்படுத்தப்பட்ட வாகனங்களுடன் ஒப்பிடும்போது அதிகமாக இருக்கும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டம் குறித்து ஜனாதிபதி

Wednesday, January 22nd, 2025 at 8:31 (SLT)

நாட்டின் அனைத்துப் பிரிவினரையும் பொருளாதாரச் செயல்பாட்டில் ஈடுபடுத்தும் நோக்கில் இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

இலங்கையில் தொழிற்கல்வி மற்றும் பயிற்சி வாய்ப்புகளை மேம்படுத்துவதற்காக உலக வங்கி பிரதிநிதிகள் இலங்கை பிரதமருடன் கலந்துரையாடல்

Wednesday, January 22nd, 2025 at 8:24 (SLT)

உலக வங்கியின் தெற்காசிய வலயத்திற்கான உப தலைவர் மார்டின் ரெய்சர் அவர்கள் இலங்கை பாராளுமன்றத்தின் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை சந்தித்து பிரதான அபிவிருத்தி முன்னுரிமைகள் தொடர்பில் கலந்துரையாடினார். கல்வி, பாலின சமத்துவம் மற்றும் பிராந்திய விடயங்கள், நிலையான முன்னேற்றத்தை ஏற்படுத்தல் மற்றும் தேசிய சவால்களுக்கு முகம்கொடுப்பதற்கான தேவைகள் தொடர்பில் இந்த சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டது.

மேலும் வாசிக்க >>>

துருக்கி ஹோட்டலில் பாரிய தீவிபத்து : ஜன்னல்கள் ஊடாக கீழே குதித்து தப்ப முயன்ற மக்கள் : 70 பேர் பலி

Wednesday, January 22nd, 2025 at 8:15 (SLT)

துருக்கியின் பொலுமலைப்பகுதியில் உள்ள சுற்றுலாப்பயணிகளிற்கு பிரபலமான ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் தொகை 70 ஆக அதிகரித்துள்ளது.மரகூரைகளை கொண்ட 12மாடிஹோட்டலில் தீவிபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

சிட்னியில் யூத சிறுவர் பராமரிப்பு நிலையத்தைதீயிட்டு கொளுத்தமுயற்சி

Wednesday, January 22nd, 2025 at 8:09 (SLT)

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் குழந்தைகள் பராமரிப்பு நிலையத்தை தீ மூட்டி எரிகக முயன்ற சம்பவத்திற்கு யூதர்கள் எதிர்ப்பே காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

மக்களை தமது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்காக பயன்படுத்திய அரசாங்கத்தில் இருந்த சிலருக்கு மக்கள் மயமான அரசியல் கலாசாரத்தை புரிந்துகொள்ள முடியாது : பிரதமர்

Wednesday, January 22nd, 2025 at 8:03 (SLT)

மக்களை தமது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்காக பயன்படுத்திய அரசாங்கத்தில் இருந்த சிலருக்கு மக்கள் மயமான அரசியல் கலாசாரத்தை புரிந்துகொள்வது கடினமென பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

Clean Sri Lanka வேலைத்திட்டம் தொடர்பில் பாராளுமன்றத்தில் இடம்பெறும் இரண்டு நாள் விவாதத்தின் முதல் நாளில் செவ்வாய்க்கிழமை (21) கருத்து தெரிவித்த போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

மனுஷ நாணயக்கார குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலை

Tuesday, January 21st, 2025 at 10:17 (SLT)

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக விடுக்கப்பட்ட அழைப்பிற்கு அமைய, அவர் இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வருகைதந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.