ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை உத்தியோகபூர்வமாக வரவேற்கும் நிகழ்வு இன்று

Monday, December 16th, 2024 at 10:30 (SLT)

மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை உத்தியோகபூர்வமாக வரவேற்கும் நிகழ்வு இன்று (16) இந்திய ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லமான ராஷ்டிரபதிபவனில் நடைபெறவுள்ளது. ஜனாதிபதியை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு இன்று காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

மேலும் வாசிக்க >>>

சபாநாயகராக வருவதற்கு கலாநிதி பட்டம் தேவையில்லை : சமல் ராஜபக்ச

Monday, December 16th, 2024 at 10:27 (SLT)

சபாநாயகராக வருவதற்கு கலாநிதி பட்டமோ, கல்விச் சான்றிதழோ தேவையில்லை, நாடாளுமன்றத்திற்கு தெரிவான எவரும் சபாநாயகராக முடியும் என முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார். முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல கலாநிதி பட்டம் பெற்றவர் என்ற விபரங்களை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தால் மட்டுமே பிரச்சினை ஏற்படும்.

மேலும் வாசிக்க >>>

4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு

Monday, December 16th, 2024 at 10:21 (SLT)

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி, கண்டி, பதுளை, மாத்தளை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

புதிய சபாநாயகர் தெரிவு நாளை

Monday, December 16th, 2024 at 10:18 (SLT)

பாராளுமன்றம் நாளை (17) கூடவுள்ளது. அதன்படி, இந்த வாரத்தில் நாடாளுமன்றம் கூடி நாளை(17) நாளை மறுதினம் (18) இரண்டு நாட்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது வெற்றிடமாக உள்ள சபாநாயகர் பதவிக்கு புதிய சபாநாயகர் தெரிவு செய்யப்பட உள்ளார்.

மேலும் வாசிக்க >>>

மயோட்டே தீவை தாக்கிய புயல் : 11 பேர் உயிரிழப்பு

Monday, December 16th, 2024 at 10:14 (SLT)

இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள தீவு மயோட்டே. இந்தத் தீவு பிரான்சின் கட்டுப்பாட்டில் உள்ளது. சுமார் 3 லட்சத்து 20 ஆயிரம் பேரை மக்கள்தொகையாகக் கொண்டுள்ள மயோட்டே தீவு மடகஸ்கர் நாட்டின் அருகே அமைந்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

முட்டை விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

Monday, December 16th, 2024 at 10:11 (SLT)

எதிர்வரும் பண்டிகை காலத்திற்காக முட்டையொன்றை சில்லறை விலையில் 30 முதல் 35 ரூபாவிற்கு விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.சராசரியாக 50 கிராமுக்கு குறைவான எடையுள்ள முட்டை 30 ரூபாய் முதல் 32 ரூபாய் வரை விலை கொடுத்து வாங்கலாம் என அந்த சங்கத்தின் தலைவர் என்டன் அப்புஹாமி தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் அரசாங்கம் இரட்டை நிலைப்பாட்டில் : நாமல்

Monday, December 16th, 2024 at 10:07 (SLT)

கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் அரசாங்கம் இரட்டை நிலைப்பாட்டில் செயற்படுகிறது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் வாசிக்க >>>

ஜனாதிபதி அநுரவுக்கும் பிரதமர் மோடிக்கும் இடையிலான சந்திப்பு இன்று

Monday, December 16th, 2024 at 9:51 (SLT)

இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும், நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பு இன்று நடைபெறவுள்ளது. அதேநேரத்தில், மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள ஜனாதிபதியை உத்தியோகபூர்வமாக வரவேற்கும் நிகழ்வு இன்று (16) இந்திய ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லமான ராஷ்ட்பதிபவனில் நடைபெறவுள்ளது.

மேலும் வாசிக்க >>>

ஜேர்மனியில் முக்கியமான இடங்கள் மீது பறந்த மர்ம ட்ரோன்கள்

Sunday, December 15th, 2024 at 11:12 (SLT)

ஜேர்மனியில், ராணுவ தளங்கள் முதலான முக்கியமான இடங்கள் மீது ட்ரோன்கள் பறந்த விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நேற்று, அதாவது, வெள்ளிக்கிழமையன்று, ஜேர்மனியிலுள்ள முக்கியமான ராணுவ தளங்கள் மற்றும் தொழிற்சாலைகள் இருக்கும் இடங்களுக்கு மேலாக அடையாளம் தெரியாத ட்ரோன்கள் பறந்ததாக ஜேர்மன் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

மேலும் வாசிக்க >>>

23 வயது இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

Sunday, December 15th, 2024 at 11:07 (SLT)

யாழில் எலிக்காய்சல் நோய் என சந்தேகிக்கப்பட்டு அதிதீவிர சிகிச்சை பிரிவில் 3 நாட்களாக அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞரொருவர் நேற்று (14) உயிரிழந்தார். யாழ்ப்பாணம் – கரவெட்டி பகுதியைச் சேர்ந்த 23 வயது இளைஞனே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேலும் வாசிக்க >>>

இன்று இந்தியா பயணமாகிறார் இலங்கை ஜனாதிபதி

Sunday, December 15th, 2024 at 11:01 (SLT)

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (15) உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியா செல்கிறார். அவர் இன்று (15) முதல் 17ஆம் திகதி வரை இந்தியாவில் தங்கியிருந்து பல்வேறு உயர்மட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

புலம்பெயர் முதலீடுகளை தடுக்க முனையும் தமிழ் அரசியல் பிரதிநிதிகள்

Sunday, December 15th, 2024 at 10:55 (SLT)

போரினால் அழிவுகளை எதிர்கொண்டுள்ள தமிழர் தாயகப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் புலம்பெயர்ந்த தமிழர்களின் அந்நிய முதலீடுகளுக்கு தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்கள் எதிர்ப்பு வெளியிடுகின்றமை விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் வாசிக்க >>>

அநுரவின் விஜயத்திற்கு முன் இந்திய பிரதமருக்கு அனுப்பப்பட்ட விசேட கடிதம் : தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

Sunday, December 15th, 2024 at 10:51 (SLT)

தமிழ் தேசத்தை அங்கீகரிக்கும் மற்றும் பாதுகாக்கும் இலங்கையில் ஒரு கூட்டாட்சி அரசியலமைப்பிற்கு இந்தியாவின் ஆதரவை வலியுறுத்துவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. இலங்கை ஜனாதிபதி இந்தியப் பிரதமரைச் சந்திக்கவுள்ள நிலையில், தமது கோரிக்கைகளை முன்வைத்து நரேந்திர மோடிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

கனேடிய வெளிவிவகார அமைச்சின் அழைப்பில் சிறிதரன் ஒட்டோவா பயணம் : இந்தோ-பசுபிக் பிராந்திய பிரதியமைச்சருடன் முக்கிய சந்திப்பு

Sunday, December 15th, 2024 at 10:46 (SLT)

கனேடிய வெளிவிவகார அமைச்சின் அழைப்பில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக்குழுக்களின் தலைவருமான சிவஞானம் சிறிதரன் ஒட்டோவா நோக்கிப் பயணமாகியுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

இலங்கை ஜனாதிபதி தனது வெளிநாட்டு பயணத்திற்கு இந்தியாவை தெரிவு செய்துள்ளமை சாதகமான விடயம் : இந்திய வெளிவிவகார பாதுகாப்பு ஆய்வாளர்

Sunday, December 15th, 2024 at 10:43 (SLT)

இலங்கை ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க இந்தியாவை தனதுமுதலாவது வெளிநாட்டு பயணத்திற்கு தெரிவு செய்துள்ளமை சாதகமான விடயம்.ஏனைய நாடுகளிற்கு செல்வதற்கு முன்னர் அவர் இந்தியாவை தெரிவு செய்துள்ளார். இது இந்தியா அவருக்கு முன்னுரிமைக்குரிய விடயம் என்பதை காண்பிக்கின்றது என புதுடில்லியை தளமாக வெளிவிவகார பாதுகாப்பு விவகாரங்களிற்கான ஆய்வாளர் சிறிபதி நாரயணண் ஈடிவி பாரத்திற்கு தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>