சஜித்துக்கு ஆதரவளிக்க காரணம் என்ன : தமிழரசுக் கட்சியின் விசேட அறிக்கை

Monday, September 16th, 2024 at 9:25 (SLT)

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான விசேட அறிக்கையொன்றை இலங்கை தமிழரசுக் கட்சி இன்று திங்கட்கிழமை வெளியிடவுள்ளது. வவுனியாவில் இந்த அறிக்கை வெளியிடப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பே பிரதமர் பதவிக்கு போட்டி

Sunday, September 15th, 2024 at 10:28 (SLT)

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாகவே ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பிரதமர் பதவிக்கான போட்டி ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் வாசிக்க >>>

திடீரென தரையிறங்கிய ரணிலின் உலங்குவானூர்தி

Sunday, September 15th, 2024 at 10:25 (SLT)

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை அழைத்துச் சென்ற உலங்கு வானூர்தி அவசரமாக தரையிறக்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மேலும் வாசிக்க >>>

போலி வாக்குகளை செலுத்துபவர்களுக்கு கடும் தண்டனை

Sunday, September 15th, 2024 at 10:17 (SLT)

ஜனாதிபதித் தேர்தலின் போது மோசடியான வாக்குகளை அல்லது அதற்கு ஆதரவளிப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுமென தேர்தல் ஆணைக்குழுவின் மேலதிக ஆணையாளர் சிந்தக குலரத்ன தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

மிதக்கும் சூரியசக்தி கருத்திட்டம் தொடர்பான அபிவிருத்தி

Sunday, September 15th, 2024 at 10:11 (SLT)

தற்போதுள்ள நீர் மூலங்களின் மேல் மிதக்கும் சூரியசக்தி கருத்திட்டங்களை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்கியுள்ளது. புதுப்பிக்கத் தக்க வலுசக்தி உற்பத்தியை அதிகரிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

ஏமாற்று அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம் : திலித் ஜயவீர

Sunday, September 15th, 2024 at 10:04 (SLT)

தாம் முன்வைத்திருப்பது வாக்குறுதிப் பத்திரமல்ல, மாறாக களத்தில் யதார்த்தமாக்கக்கூடிய மூலோபாய வேலைத்திட்டத்தையே முன்வைத்திருப்பதாக சர்வஜன அதிகாரத்தின் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார். அக்குரஸ்ஸ பிரதேசத்தில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

ரணிலுக்கு அநுரவோடு டீல் இருந்தாலும் எனது டீல் மக்களுடனே:சஜித் பிரேமதாசவை

Sunday, September 15th, 2024 at 9:54 (SLT)

அநுரகுமார மற்றும் ரணில் விக்கிரமசிங்க கூட்டணியிடம் நாட்டை ஒப்படைப்பதா? இல்லை என்றால் நாட்டை கட்டி எழுப்புகின்ற, நாட்டை வெற்றி பெறச் செய்யும் பொது மக்களின் யுகத்திற்காக ஐக்கிய மக்கள் சக்தியை வெற்றி பெறச் செய்வதா? என்ற தீர்மானம் மக்கள் வசமே காணப்படுகின்றது. இன்று ரணில் மற்றும் அநுர பெரிய டீல் ஒன்றை செய்திருக்கின்றார்கள்.

மேலும் வாசிக்க >>>

மனைவியை கொலை செய்த கணவர் கைது

Sunday, September 15th, 2024 at 9:49 (SLT)

தனிப்பட்ட தகராறு காரணமாக கணவன் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார்.நேற்று (14) மாலை வாத்துவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொதுப்பிட்டிய பிரதேசத்தில் இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கோரகஹவத்த, பொதுப்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 23 வயதுடைய யுவதியே உயிரிழந்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

முதலைக்குடாவில் சஜித்தின் தேர்தல் பிரச்சார அலுவலகம் திறந்து வைப்பு

Saturday, September 14th, 2024 at 13:26 (SLT)

ஜனாதிபதி வேட்பாளரும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவருமான சஜித் பிரேமதாசாவின் தேர்தல் பிரச்சார அலுவலகம் கொக்கட்டிச்சோலை முதலைக்குடாவில் நேற்று வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது .ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத்தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான சோ. கணேசமூர்த்தி அலுவலகத்தை நாடா வெட்டி திறந்து வைத்தார் . ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பட்டிப்பளை பிரதேச தலைவரும் முன்னாள் தவிசாளரும் அதிபருமான சிவ.அகிலேஸ்வரன் தலைமையில் திறப்பு விழா இடம் பெற்றது.

மேலும் வாசிக்க >>>

மக்களுக்கான அரசாங்கத்தை ஸ்தாபிக்க தயார்: பிரச்சார கூட்டத்தில் அனுர திட்டவட்டம்

Saturday, September 14th, 2024 at 13:20 (SLT)

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எமது வெற்றியை இனிமேல் மாற்ற முடியாது எனவும், மக்களுக்கான அரசாங்கத்தை தாம் ஸ்தாபிக்க இருப்பதாகவும் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அம்பாறையில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அனுரகுமார திஸாநாயக்க இவ்வாறு தெரிவித்திருந்தார்.

மேலும் வாசிக்க >>>

கொள்ளையடித்த ஞானசாரர், 82 வயது முதியவருக்கு ஏற்பட்ட துயரம் : நீதிமன்றத்தின் அதிரடி

Saturday, September 14th, 2024 at 8:57 (SLT)

கலபொட அத்தே ஞானசார தேரரால் பலவந்தமாக கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் கொழும்பு பம்பலப்பிட்டியவில் அமைந்துள்ள 100 மில்லியன் ரூபாய் பெறுமதியான வீட்டையும் சொத்துக்களையும் உடனடியாக விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

தேர்தல் அவதூறு பரப்புரைகளை நிறுத்துவதற்கு தீவிர முயற்சி:தேர்தல்கள் ஆணைக்குழு

Saturday, September 14th, 2024 at 8:51 (SLT)

ஜனாதிபதி தேர்தல் பிரசாரம் முடிவடைந்த பின்னர் 48 மணித்தியாலங்கள் அமைதியான காலப்பகுதியில் வேட்பாளர் பிரசாரம் மற்றும் சமூக ஊடகங்களில் சேறு பூசுவதை நிறுத்துவதற்கான விரிவான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த தேர்தல்கள் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

தொழிலுக்காக குவைத் சென்ற பெண்: வீட்டில் அடைத்து வைத்து, உணவு வழங்காமல் சித்ரவதை

Saturday, September 14th, 2024 at 8:46 (SLT)

இந்தியா ஆந்திர மாநிலம், அன்னமைய்யா மாவட்டத்தைச் சேர்ந்த கவிதா எனும் பெண், தொழிலுக்காக குவைத் (Kuwait) நாட்டுக்கு சென்றுள்ளார்.ஆனால், கவிதாவுக்கு அங்கு கூறியபடி தொழிலோ அல்லது சம்பளமோ கிடைக்கவில்லை.

மேலும் வாசிக்க >>>

இரு தீமைகளில் யார் குறைவானவர்?: ட்ரம்ப், கமலா குறித்து போப் பிரான்சிஸ் கருத்து

Saturday, September 14th, 2024 at 8:42 (SLT)

கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ் இந்தோனேஷியா, தைமூர், நியூகினியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த போப் பிரான்சிஸ் ரோம் திரும்பும் விமானத்தில் வைத்து செய்தியாளர்களைச் சந்தித்தார்.நடைபெறவிருக்கும் அமெரிக்க தேர்தல் குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வியெழுப்பினர்.

மேலும் வாசிக்க >>>

தேர்தல் பிரசாரத்தை ஊக்குவிக்க விருந்துபசாரம் : ரணிலுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை

Friday, September 13th, 2024 at 12:11 (SLT)

சுயேட்சை வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது தேர்தல் பிரசாரத்தை ஊக்குவிக்கும் வகையில் விருந்துபசாரம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளதாகவும் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தேர்தல் கண்காணிப்பு நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>