வட மாகாணத்தின் பல வீதிகள் வழமைக்கு

Thursday, December 4th, 2025 at 10:11 (SLT)

சீரற்ற காலநிலை காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான 7 பிரதான வீதிகள், தற்காலிகமாகச் சீரமைக்கப்பட்டுப் பொதுமக்களின் பாவனைக்காகத் திறந்து விடப்பட்டுள்ளதாக வட மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் பொறியியலாளர் திருமதி அபிராமி வித்யாபரன் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

இலங்கைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி அவசர நிவாரணம்

Thursday, December 4th, 2025 at 10:06 (SLT)

டித்வா புயல் ஏற்படுத்திய பாரிய பேரழிவை அடுத்து இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் நிவாரண நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதற்காக, ஆசிய அபிவிருத்தி வங்கி 3 மில்லியன் அமெரிக்க டொலர் அனர்த்த நிவாரண மானியத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது.

மேலும் வாசிக்க >>>

வெளிநாட்டு நிவாரணப் பொருட்களுக்கு வரி இல்லை

Wednesday, December 3rd, 2025 at 9:06 (SLT)

வெளிநாட்டு நன்கொடையாளர்களால் வழங்கப்படும் நிவாரணப் பொருட்களை தீர்வை வரிகள் மற்றும் ஏனைய வரிகள் இன்றி விடுவிப்பதற்கு சுங்கத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை

Wednesday, December 3rd, 2025 at 9:02 (SLT)

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பதுளை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

மேலும் வாசிக்க >>>

தேசிய அனர்த்தத்திற்கு உள்ளான பிரதேசங்கள் அறிவிப்பு

Wednesday, December 3rd, 2025 at 8:59 (SLT)

நிலவிய சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களைத் தொடர்ந்து, அரசாங்கம் தேசிய அனர்த்தத்திற்கு உள்ளான பிரதேசங்களை அறிவித்து வர்த்தமானி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

பாடசாலை மாணவி கர்ப்பம்: தாயின் கள்ளக்காதலன் தலைமறைவு

Wednesday, December 3rd, 2025 at 8:56 (SLT)

கல்முனை தலைமையகப் பொலிஸ் பிரிவில் பாடசாலை மாணவி ஒருவர் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு கர்ப்பமான சம்பவம் பதிவாகியுள்ளது. அம்பாறை மாவட்டம், கல்முனை கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வந்த மாணவியே இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டு கல்முனை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

கடுவெல – பத்தரமுல்ல வீதி திறப்பு

Wednesday, December 3rd, 2025 at 8:54 (SLT)

வெள்ள நிலைமை காரணமாக மூடப்பட்டிருந்த கடுவெல முதல் பத்தரமுல்ல வரையிலான வீதி போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

வெள்ளத்தில் சிக்கிய வீடுகளை சுத்தம் செய்வதற்காக வழங்கும் உதவி 10,000 ரூபாவிலிருந்து 25,000 ரூபாவாக அதிகரிப்பு

Wednesday, December 3rd, 2025 at 8:51 (SLT)

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்காக வெள்ளத்தில் சிக்கிய வீடு அல்லது சொத்துக்களை சுத்தம் செய்வதற்காக வழங்கப்படும் உதவித் தொகையை10,000 ரூபாவிலிருந்து 25,000 ரூபாவாக அதிகரிக்க நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது. நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பணிப்புரைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

திருகோணமலையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

Tuesday, December 2nd, 2025 at 8:53 (SLT)

திருகோணமலையில் நேற்று (01) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. திருகோணமலையில் உள்ள சீன துறைமுக நகர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட 5 ஆம் கட்டை பகுதியில் இந்த துப்பாக்கி பிர​யோகம் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் வாசிக்க >>>

இன்று பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

Tuesday, December 2nd, 2025 at 8:49 (SLT)

வடக்கு மற்றும் தென் மாகாணங்களில் இன்று (2) இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. 

மேலும் வாசிக்க >>>

வௌிநாட்டு நன்கொடைகளை சுங்கவரியின்றி இறக்குமதி செய்ய திட்டம்

Tuesday, December 2nd, 2025 at 8:47 (SLT)

வெளிநாட்டு நன்கொடையாளர்களால் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்களை சுங்க வரிகள் மற்றும் கட்டணங்கள் இன்றி இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் ஒரு பொறிமுறையை வகுத்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

இந்திய வான்வௌியில் பாகிஸ்தான் உதவி விமானங்கள் பறக்க தடையில்லை

Tuesday, December 2nd, 2025 at 8:44 (SLT)

புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிச் செல்லும் பாகிஸ்தான் உதவி விமானத்திற்கு, இந்திய வான்வெளியைப் பயன்படுத்த புது டெல்லி அனுமதி மறுத்ததாக பாகிஸ்தான் ஊடகங்களில் பரவும் செய்திகள் அடிப்படையற்றவை என இந்தியா தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

அனர்த்த நிலைமை காரணமாக உயிரிழப்புகளின் எண்ணிக்கை 334 ஆக அதிகரிப்பு : 370 பேரை காணவில்லை

Monday, December 1st, 2025 at 7:17 (SLT)

நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்துள்ள அனர்த்த நிலைமை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 334 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. நேற்று (30) மாலை 6 மணிக்கு வெளியிடப்பட்ட அண்மைய அறிவிப்பின்படி, 370 பேர் காணாமல் போயுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

கொத்மலை அணை உடைந்ததாக பரவும் தகவல் பொய்யானது

Monday, December 1st, 2025 at 7:13 (SLT)

கொத்மலை அணை உடைந்ததாக தற்போது வெளியாகி வரும் தகவலில் எந்த உண்மையும் இல்லை என குறித்த நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பிலுள்ள பொறியியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

முல்லைத்தீவு நாயாறு பாலம் உடைந்தது : போக்குவரத்து முற்றாக பாதிப்பு

Monday, December 1st, 2025 at 7:09 (SLT)

முல்லைத்தீவு நாயாறு பிரதான பாலம் வெள்ளப்பெருக்கு காரணமாக முழுமையாக உடைந்துள்ளதோடு, போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. 

மேலும் வாசிக்க >>>