மொட்டுக் கட்சி உறுப்பினர்கள் இருவர் துப்பாக்கியுடன் கைது

Monday, December 15th, 2025 at 11:36 (SLT)

மொட்டுக் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்கள் இருவர் துப்பாக்கியுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னாள் பியகம பிரதேச சபை உறுப்பினர் பலட்டுவ விதானகே சுஜித் ஹர்ஷன மற்றும் தற்போது பதவியில் இருக்கும் உறுப்பினர் மத்தும லியனகே சுபாசன பிரபாத் ஆகியோரே சபுகஸ்கந்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

தந்தையை காப்பாற்ற சென்று உயிரிழந்த மகன்

Monday, December 15th, 2025 at 11:32 (SLT)

குருணாகல், மஹாவ – நாகொல்லாகம பிரதேசத்தில் காட்டுப்பன்றிகளைப் பிடிக்க பொருத்தப்பட்ட மின்சார கம்பியில் சிக்கிய தனது தந்தையைக் காப்பாற்றச் சென்ற 17 வயது மகன் உயிரிழந்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

அமெரிக்க பல்கலைக்கழத்தில் துப்பாக்கிச் சூடு : இருவர் பலி 8 பேர் காயம்

Sunday, December 14th, 2025 at 11:03 (SLT)

அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் எட்டு பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் வாசிக்க >>>

பேரனர்த்த முகாமைத்துவத்திற்காக ஸ்டார்லிங்க் இணைய சேவை 100 அலகுகளை இலவசமாக வழங்குகிறது

Sunday, December 14th, 2025 at 10:56 (SLT)

அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஸ்டார்லிங்க் நிறுவனம், நாட்டில் பேரனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகளுக்கு உதவும் முகமாக இணைய சேவைக்கு 100 அலகுகளை நன்கொடையாக வழங்கியுள்ளது என நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த நன்கொடை தகவல் தொடர்பு மற்றும் இணைப்பை வலுப்படுத்த உதவும் எனவும், நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை மிகவும் திறம்பட மேற்கொள்ள உதவும் எனவும் அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்தார்.

சனிக்கிழமை (13) இடம் பெற்ற ஊடக சந்திப்பிலேயே இதனை தெரிவித்துள்ளார்.

இணையச் சேவைக்கான வன்பொருள் அலகுகள் ஏற்கனவே நாட்டிற்கு வந்து சேர்ந்துள்ளதாகவும், அனர்த்த மீட்புப் பணிகளின் செயல்திறனை மேலும் மேம்படுத்துவதற்காக அவற்றை அனர்த்த முகாமைத்துவ நிலையத்திடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.


மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதி சுற்றி வளைப்பு : மூவர் கைது

Sunday, December 14th, 2025 at 10:53 (SLT)

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதி சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. கல்கிஸ்ஸ பிரதேச குற்றப் புலனாய்வுப் பணியகத்தினரால் நேற்று (13) இரவு இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி

Sunday, December 14th, 2025 at 10:50 (SLT)

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

விமான நிலையத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

Sunday, December 14th, 2025 at 10:47 (SLT)

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் முன்னெடுத்த சோதனையின் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 643 ஆக அதிகரிப்பு

Sunday, December 14th, 2025 at 10:44 (SLT)

நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 643 ஆக அதிகரித்துள்ளது.மேலும் 184 பேர் காணாமற் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

பொலிஸாரின் சுற்றிவளைப்பில் மான் இறைச்சி, துப்பாக்கியுடன் இருவர் கைது

Saturday, December 13th, 2025 at 11:03 (SLT)

மான் இறைச்சி, வேட்டைக்கு பயன்படுத்திய துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் வைத்திருந்த இரு சந்தேக நபர்களை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் மான் இறைச்சி உட்பட வேன் மோட்டார் சைக்கிள் என்பன கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளன.

மேலும் வாசிக்க >>>

பேஸ்புக் விருந்து; 26 பேர் போதைப்பொருட்களுடன் கைது

Saturday, December 13th, 2025 at 10:45 (SLT)

தெல்தெனிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு அருகிலுள்ள ஹோட்டல் ஒன்றில் நடத்தப்பட்ட ‘பேஸ்புக் விருந்து’ ஒன்றைச் சுற்றிவளைத்த பொலிஸார், போதைப்பொருட்களுடன் 22 இளைஞர்களையும் 4 யுவதிகளையும் கைது செய்துள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

அமெரிக்கத் தூதுவர் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் இடையில் சந்திப்பு

Saturday, December 13th, 2025 at 10:41 (SLT)

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் மற்றும் விஞ்ஞானம், தொழில்நுட்பம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பேராசிரியர் கோமிக உடுகமசூரிய ஆகியோருக்கிடையிலான சந்திப்பு ஒன்று கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் அண்மையில் இடம்பெற்றது.

மேலும் வாசிக்க >>>

4 மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் மண்சரிவு அபாய எச்சரிக்கை

Saturday, December 13th, 2025 at 10:38 (SLT)

நிலவும் மழையுடனான வானிலையால் பதுளை மாவட்டத்தில் மண்சரிவு அபாயமிக்க பகுதிகளிலுள்ள சுமார் 600-இற்கும் அதிகமானோர் பாதுகாப்பு இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் பிரபாத் அபேவிக்ரம தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

இலங்கை மீண்டெழ ஆஸ்திரேலியா துணை நிற்கும்: பிரதமரிடம் உறுதியளிப்பு

Saturday, December 13th, 2025 at 10:35 (SLT)

பேரிடரால் ஏற்பட்ட நெருக்கடியான நிலையில் இருந்து இலங்கை மீண்டெழுவதற்கு ஆஸ்திரேலியா துணை நிற்கும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் குடியுரிமை, ஒழுக்கநெறி மற்றும் பல்கலாசார அலுவல்கள் மற்றும் சர்வதேச கல்விக்கான துணை அமைச்சர் ஜூலியன் ஹில் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.

மேலும் வாசிக்க >>>

வெளிநாட்டு பணவனுப்பல் அதிகரிப்பு

Saturday, December 13th, 2025 at 10:32 (SLT)

இலங்கைக்குக் கிடைத்த வெளிநாட்டுப் பணயனுப்பல் கடந்த நவம்பர் மாதத்தில் 673.4 மில்லியன் அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 

மேலும் வாசிக்க >>>

இலங்கையில் 6 பேரில் ஒருவர் வறுமையில்

Saturday, December 13th, 2025 at 10:30 (SLT)

“இலங்கையில் 6 பேரில் ஒருவர் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அவர்களை நாம் மீட்டெடுக்க வேண்டும். வறுமையான மக்களைக் கொண்ட நாடாகத் தொடர்ந்து இந்த நாட்டை முன்னெடுத்துச் செல்ல முடியாது” என தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>