கொழும்பு துறைமுக மனித புதைகுழியின் அகழ்வு நிறைவு

Friday, October 17th, 2025 at 10:46 (SLT)

கொழும்பு துறைமுகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மனித உடல்கள் மீட்கப்பட்ட புதைகுழியின் அகழ்வாய்வுப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

இஷாராவின் அறிவாற்றலை புகழ்ந்து பாராட்டிய பிரதி அமைச்சர்

Friday, October 17th, 2025 at 10:42 (SLT)

இஷாரா குற்ற செயல்களுக்காக பயன்படுத்திய அறிவாற்றலை நாட்டின் அபிவிருத்திக்காக பயன்படுத்தி இருந்தால் நாடு முன்னேறி இருக்கும் என பிரதி அமைச்சர் ரீ.பி சரத் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

யாழில் இடம்பெற்ற இருவேறு விபத்துக்களில் இருவர் பலி

Friday, October 17th, 2025 at 10:37 (SLT)

சாவகச்சேரிப் பகுதியில் ரயிலில் இருந்து இறங்க முற்பட்ட குடும்பப் பெண் அதிலிருந்து தவறி விழுந்து நேற்று (16) உயிரிழந்தார்.

கொழும்பில் இருந்து யாழ் நோக்கிச் சென்ற ரயில் சாவகச்சேரி – சங்கத்தானையை அடைந்ததும் மேற்படி பெண் ரயிலில் இருந்து இறங்க முற்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சிறுவன் கைது

Friday, October 17th, 2025 at 10:33 (SLT)

மட்டக்களப்பு மாவட்டத்தில் 15 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 17 வயது சிறுவன் ஒருவரை நேற்று (16) கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க >>>

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றும் பலத்த மழை

Friday, October 17th, 2025 at 7:47 (SLT)

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேலும் வாசிக்க >>>

ஒன்லைன் கடன் தொடர்பில் பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை

Friday, October 17th, 2025 at 7:45 (SLT)

இணையதளம் மூலமாகவும், தொலைபேசிகள் மூலமாகவும் கவர்ச்சிகரமான விளம்பரங்களை வெளியிட்டு, சில சமயங்களில் தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு, பிணையில்லாமல் உடனடியாகக் கடன் வழங்க முடியும் என்று கூறி கடன் வழங்குவதற்காக முன்வந்த பெரும் எண்ணிக்கையிலான நிறுவனங்கள் இலங்கை பொலிஸாரால் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

மேலும் வாசிக்க >>>

நோய்வாய்ப்பட்ட குழந்தைகளைப் பயன்படுத்தி பணம் பறிக்கும் மோசடி

Friday, October 17th, 2025 at 7:42 (SLT)

புற்றுநோய் மற்றும் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் புகைப்படங்களைப் பயன்படுத்தி பணம் வசூலிக்கும் மோசடியில் ஈடுபட்ட மூவர் நேற்று (16) கைது செய்யப்பட்டனர்.

மேலும் வாசிக்க >>>

அர்ச்சுனா Mp , மூளை சரியில்லாதவர் என மக்கள் என கூறுகின்றனர் : இராமலிங்கம் சந்திரசேகர்

Thursday, October 16th, 2025 at 12:22 (SLT)

அர்ச்சுனா Mp , மூளை சரியில்லாத நபர் என மக்களே கூறுவதாக அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள இளைஞர்கள், போதைப் பழக்கங்களுக்கு அடிமையாக இருப்பதாக அர்ச்சுனா கூறுகின்றார். அவர் ஊடகத் துறைக்குள் நுழைய முற்படும் பெண்களை அவதூறாக பேசுகின்றார். எனவே, மக்கள் அவருக்கு மூளை சரியில்லை என கூறுகின்றனர்.

மேலும் வாசிக்க >>>

அந்தப் பெண்ணுக்காக நான் மிகவும் வருத்தப்பட்டேன் : செவ்வந்தி

Thursday, October 16th, 2025 at 12:15 (SLT)

குற்றச்செயலுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் நேபளாத்தில் பதுங்கியிருந்த நிலையில், நாட்டுக்கு இழுத்து வரப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியின் குற்ற புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் வாசிக்க >>>

இந்தியா சென்றுள்ள பிரதமர் ஹரினி

Thursday, October 16th, 2025 at 8:03 (SLT)

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இன்று (16) அதிகாலை சிறிலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL 191 என்ற விமானத்தின் ஊடாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து இந்தியாவுக்கு புறப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க >>>

பழைய முறையிலோ, புதிய முறையிலோ அடுத்த வருடம் மாகாணசபைத்தேர்தல்கள் : அமைச்சர் லால் காந்த உறுதி

Thursday, October 16th, 2025 at 6:15 (SLT)

மாகாணசபைத்தேர்தல்கள் அடுத்த வருடம் நடாத்தப்படும் என அரசாங்கம் அறிவித்திருக்கும் நிலையில், அதனை மீளுறுதிப்படுத்தியுள்ள விவசாயம், கால்நடை மற்றும் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் லால் காந்த, பழைய முறைமையிலோ அல்லது புதிய முறைமையிலோ அடுத்த வருடம் மாகாணசபைத்தேர்தல் நடாத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

யாழில் தாலிக்கொடி மற்றும் பணம் என்பவற்றை திருடிய சந்தேகநபர் கைது

Thursday, October 16th, 2025 at 6:10 (SLT)

சுன்னாகம் பகுதியில் 7 பவுண் நகை மற்றும் 3 இலட்சம் ரூபா காசு என்பவற்றை திருடிய இளைஞர் ஒருவர் 15ஆம் திகதி புதன்கிழமை சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில்,

மேலும் வாசிக்க >>>

வங்கிக் கணக்கிலிருந்து 5.69 இலட்சம் ரூபாய் மோசடி: நால்வர் கைது

Wednesday, October 15th, 2025 at 10:36 (SLT)

2024 மே 29 அன்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் வடமேல் மாகாண கணினி குற்றப்பிரிவுக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், வங்கிக் கணக்கு ஒன்றிலிருந்து 569,610 ரூபாய் மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நால்வர் நேற்று ( 14) கைது செய்யப்பட்டனர்.

மேலும் வாசிக்க >>>

நேபாளம் சென்ற இலங்கை STF அதிகாரிகள்

Wednesday, October 15th, 2025 at 10:33 (SLT)

பாதாள உலகக்குழு உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பாக நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தியை இலங்கைக்கு அழைத்து வருவதற்காக விசேட அதிரடிப் படையைச் சேர்ந்த இரு வீரர்கள் நேபாளம் சென்றுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

ஐக்கிய மக்கள் சக்தியின் அழுத்தம் காரணமாகவே மின்சாரக் கட்டண அதிகரிப்பு நிறுத்தப்பட்டது : சஜித் பிரேமதாச

Wednesday, October 15th, 2025 at 10:28 (SLT)

நாட்டில் காணப்படும் வயதில் குறைந்த ஜனநாயக அரசியல் கட்சி ஐக்கிய மக்கள் சக்தி ஆகும். 2020 பெப்ரவரியில் ஸ்தாபிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தி 30 ஆண்டுகளாக தேர்தல்களுக்கு முகம்கொடுத்த அரசியல் கட்சியாக சிலர் கருதினாலும், ஐக்கிய மக்கள் சக்தி இதுவரை 4 தேர்தல்களை மட்டுமே எதிர்கொண்டுள்ளன.

மேலும் வாசிக்க >>>