பொலிஸ் அனுமதி விண்ணப்பம் தொடர்பில் பொலிஸாரிடமிருந்து முக்கிய அறிவித்தல்

Saturday, October 11th, 2025 at 10:11 (SLT)

பொலிஸ் அனுமதி விண்ணப்பத்திற்கான இணையவழி முறை தொழில்நுட்ப கோளாறு காரணத்தால் செயலிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. பொலிஸ் அனுமதிக்கான விண்ணப்பங்களை இணையவழி முறை மூலம் மட்டுமே விண்ணப்பிக்கப்படுகின்றன.

மேலும் வாசிக்க >>>

இரவு நேர ரயிலில் மோதி காட்டு யானை பலி

Saturday, October 11th, 2025 at 9:35 (SLT)

இரவு நேர ரயிலில் மோதி காட்டு யானை ஒன்று பலியாகியுள்ளது. குறித்த விபத்து நேற்று (10) இரவு 10.20 மணியளவில் இடம் பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இரவு நேர ரயிலில் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மேலும் வாசிக்க >>>

யாழ்ப்பாணத்தை சேர்ந்த 20 வயது யுவதி முல்லைதீவில் கைது

Saturday, October 11th, 2025 at 9:30 (SLT)

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திம்பிலி பகுதியில் யாருமற்ற வீட்டில் இருந்து ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் குறித்த வீட்டில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 20 வயதுடைய இளம் பெண்ணிடமிருந்து 9 போதை மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும் வாசிக்க >>>

யாழில் அளவுக்கு அதிகமான மாத்திரைகளை உட்கொண்ட வயோதிபப் பெண் உயிரிழப்பு

Saturday, October 11th, 2025 at 9:25 (SLT)

யாழ்ப்பாணத்தில் அதிகளவான மாத்திரைகளை உட்கொண்ட வயோதிபப் பெண் ஒருவர் நேற்று (10) அதிகாலை உயிரிழந்துள்ளார்.மானிப்பாய் – சாத்தாவத்தை பகுதியை சேர்ந்த பாலசுந்தரம் சிந்தாத்துரைமேரி (வயது 69) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

யாழில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த குடும்பஸ்தர்

Saturday, October 11th, 2025 at 9:20 (SLT)

யாழ்ப்பாணம் மாவட்டத்தில், குமார சுவாமி வீதி, புத்தூர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த சதாசிவம் சண்முகவடிவேல் (வயது 55) என்பவர், தவறான முடிவெடுத்து நேற்று (10) தற்கொலை செய்து கொண்டார்.

மேலும் வாசிக்க >>>

சிறுவர்கள் தண்டனை உத்தேச சட்டம் : பேராயரின் கோரிக்கை

Friday, October 10th, 2025 at 11:55 (SLT)

சிறுவர்கள் தண்டனை தொடர்பாக முன்மொழியப்பட்ட சட்டத்தை அமுல்படுத்தும் போது, சில மேற்கத்திய சட்டங்கள் இலங்கைக்கு சிறிதும் பொருந்தாது என்று பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் அதிக பணம் பெற்ற முச்சக்கரவண்டி சாரதிகள் கைது

Friday, October 10th, 2025 at 11:53 (SLT)

நாட்டுக்கு வருகைத்தந்த பிரேசில் மற்றும் பெல்ஜியம் நாட்டை சேர்ந்த இரு சுற்றுலா பயணிகளிடமிருந்து உரிய கட்டணங்களுக்கும் அதிகமான பணத்தை பெற்ற குற்றச்சாட்டில் முச்சக்கரவண்டி சாரதிகள் இருவர் பொலிஸ் சுற்றுலாப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Friday, October 10th, 2025 at 11:50 (SLT)

பிலிப்பைன்ஸில் 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. அந்நாட்டின் மிண்டனோ தீவில் அந்நாட்டு நேரப்படி இன்று காலை 9.43 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் வாசிக்க >>>

மாகாண சபைத் தேர்தலை நிச்சயம் நடத்துவோம் தேர்தலை பிற்போட வேண்டிய தேவை எமக்கில்லை : பிரதமர் 

Friday, October 10th, 2025 at 11:44 (SLT)

இனங்களை பிரித்து முரண்பாடுகளுடன் அரசியல் செய்யும் கலாசாரத்தை முடிவுக்கு கொண்டு வந்து அனைத்து இன மக்களையும் இலங்கையர் என்ற அபிமானத்துடன் ஒன்றிணைத்துள்ளோம்.மாகாண சபைத் தேர்தலை நிச்சயம் நடத்துவோம். தேர்தல் குறித்து எவரும் சந்தேகம் கொள்ள வேண்டிய தேவையில்லை. தேர்தலை பிற்போடுவதற்கான அவசியம் எமக்கு கிடையாது. தேர்தலில் காணப்படும் சட்ட சிக்கல்களுக்கு தீர்வு கண்டவுடன் தேர்தல் நடத்தப்படும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

ஒரே பார்வையில் புதிய அமைச்சுர்கள், பிரதியமைச்சர்களின் விபரம்

Friday, October 10th, 2025 at 11:41 (SLT)

இன்று (10) காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்திற்கு அமைய, மூன்று புதிய அமைச்சர்களும் பத்து பிரதி அமைச்சர்களும் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றனர்.

மேலும் வாசிக்க >>>

நீச்சல் குளத்தில் சிறுவன் உயிரிழப்பு : 7 பேர் கைது

Friday, October 10th, 2025 at 11:38 (SLT)

நுகேகொடை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் நீச்சல் குளத்தில் 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, சிறுவன் கல்வி பயின்று வந்த முன்பள்ளியின் உதவி அதிபர் உட்பட ஏழு பேரை மிரிஹான பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

சமய விவகார பிரதி அமைச்சராக, முனீர் முலாபர்

Friday, October 10th, 2025 at 11:36 (SLT)

சமய விவகார பிரதி அமைச்சராக, முனீர் முலாபர் சற்று முன் ஜனாதிபதி அனுராகுமாரவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.


பாடசாலை மாணவர்களிடையே மன உளைச்சல் அதிகரிப்பு : பேராசிரியர் மியுரு சந்திரதாச

Thursday, October 9th, 2025 at 11:01 (SLT)

பாடசாலை மாணவர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். வகுப்பறையில் உள்ள 6 மாணவர்களில் ஒருவர் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். அந்த வகையில் இலங்கையில் நாளாந்தம் இளைஞர்களிடையே மன ரீதியான தாக்கம் அதிகரித்து செல்வதாக களனி பல்கலைக்கழக மருத்துவ பீட பேராசிரியர் விசேட வைத்திய நிபுணர் மியுரு சந்திரதாச சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

உதய கம்மன்பில இலஞ்ச,ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை

Thursday, October 9th, 2025 at 10:59 (SLT)

முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று வியாழக்கிழமை (09) காலை முன்னிலையாகியுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

இலங்கை கடற்பரப்பில் 47 இந்திய மீனவர்கள் கைது

Thursday, October 9th, 2025 at 10:07 (SLT)

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடித்த 47 இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>