தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற இந்தியா தவறி விட்டது என்று கூறுகின்றார் பேராசிரியர் சி.க. சிற்றம்பலம். பேராசிரியர் சிற்றம்பலம் கல்விமானாக இதைக் கூறுகின்றார் என்பதிலும் பார்க்க அரசியல் வாதியாகப் பேசுகின்றார் என்பதே பொருத்தமானது. இவர் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உப தலைவர். தமிழரசுக் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் பிரதான பங்காளி என்பதால் பேராசிரியர் சிற்றம்பலத்தின் கருத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் கருத்தாகக் கொள்வதிலும் தவறேதும் இல்லை.
யுத்தம் முடிந்த பின்னராவது இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்த்து வைப்பதில் இந்தியா அக்கறை செலுத்தவில்லை என்பது பேராசிரியர் சிற்றம்பலம் வெளிப்படுத்திய மனக் குறை. Read the rest of this entry »













