ஐ.எஸ். தீவிரவாத அமைப்பை அமெரிக்கா அழிக்கும்: ஒபாமா ஆவேசம்

February 27th, 2016 latha Posted in இணையத்தள கட்டுரை No Comments »

obamaஐ.எஸ். தீவிரவாதிகளுடனான சண்டை கடினமானது என்றாலும் அமெரிக்கா ஐ.எஸ். தீவிரவாதத்தை முற்றிலுமாக அழிக்கும் என்றும் பாதுகாப்பான எதிர்காலத்தை இந்த உலகத்திற்கு அமெரிக்கா வழங்கும் என்றும் அமெரிக்க அதிபர் ஒபாமா ஆவேசமாக பேசினார்.அதிபர் ஒபாமா தனது வாராந்திர உரையில் பேசியவை பின்வருமாறு:- Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

வறுமையால் மக்கள் வாடும் நிலையில் ரூ.5 கோடி செலவில் பிறந்தநாள் கொண்டாடும் ஜிம்பாப்வே அதிபர்

February 27th, 2016 latha Posted in இணையத்தள கட்டுரை No Comments »

JIMPAWOஉலகின் மிகவும் வயதான தலைவர்களில் ஒருவராக கருதப்படும் ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபே, வறுமையால் மக்கள் அல்லல்படும் அந்நாட்டில் இன்று தனது 92-வது பிறந்த நாளை தடபுடலாக கொண்டாடி வருகிறார்.1980-ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து அந்நாட்டின் அதிபராக பதவி வகித்துவரும் இவரது பிறந்தநாள் விருந்தில் சிங்கம், யானை மற்றும் காட்டெருமை கறியுடன் தடபுடலான விருந்து பரிமாறப்பட்டது. இந்நாட்டில் உள்ள பல லட்சக்கணக்கான மக்கள் மிகவும் கொடுமையான வறுமையின் பிடியில் சிக்கித்தவித்து வரும் வேளையில் சுமார் 50 ஆயிரம் வி.ஐ.பி.க்களுக்கு முகாபே அளித்த இந்த விருந்து எதிர்க்கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே அதிருப்தியை உண்டாக்கியுள்ளது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

போர்க்குற்ற விசாணையில் சர்வதேச தலையீட்டுக்கு இடமளியோம்! : சம்பிக்க ரணவக்க

February 27th, 2016 latha Posted in இணையத்தள கட்டுரை No Comments »

SAMPICAபோர்க்குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைகளில் சர்வதேசத்தின் தலையீட்டை அனுமதிக்கமாட்டோம் என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.போரின் போது நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கவுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் வெளிநாட்டவர்கள் பங்கேற்பதற்கான வாய்ப்புகள் இன்னமும் திறந்த நிலையிலேயே இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ள நிலையிலேயே அமைச்சர் சம்பிக்க ரணவக்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தில் இரு தரப்பிலும் இழப்புகள் இடம்பெற்றுள்ளன. தமிழ் மக்களும், Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

ஆப்கானிஸ்தானுக்கு கூடுதல் படையை அனுப்பும் அமெரிக்கா

February 11th, 2016 latha Posted in இணையத்தள கட்டுரை No Comments »

usaஆப்கானிஸ்தானில் பின்லேடனை வேட்டையாடுவதற்காக வந்த அமெரிக்க படைகள் அங்கிருந்த தலிபான் ஆட்சியை விரட்டியடித்து புதிய ஆட்சியை உருவாக்கியது. அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அமெரிக்க படைகள் வாபஸ் பெறப்பட்டன.தற்போது 9800 அமெரிக்க வீரர்கள் ஆப்கானிஸ்தானில் உள்ளனர். அவர்கள் ஆப்கானிஸ்தான் படைக்கு உதவிகளை செய்வது தலிபான் தீவிரவாதிகள் மீது ஏவுகணை மற்றும் விமான தாக்குதல் நடத்துவது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

தீவிரவாத அச்சுறுத்தல்: பள்ளி வளாகத்துக்குள்ளேயே மாணவர்களை புகை பிடிக்க அனுமதிக்கும் பிரான்ஸ் பள்ளிகள்

February 7th, 2016 latha Posted in இணையத்தள கட்டுரை No Comments »

franceபுகை பிடிப்பதற்காக வெளியே செல்லும் மாணவர்கள் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளாக கூடும் என்பதால் அவர்களை பள்ளி வளாகத்திற்குள்ளேயே புகை பிடிக்கலாம் என பெரும்பாலான பள்ளிகள் அனுமதி அளித்துள்ளன.பிரான்ஸின் பாரீஸில் கடந்த நவம்பர் மாதம் ஐ.எஸ். தீவரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 130 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பிறகு அங்கு ஒருவிதாமன பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. மீண்டும் தீவிரவாத தாக்குதல் நடைபெறலாம் என்ற பயம் Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

பாக். பயணத்தின்போது பிரதமர் மோடி, தாவூத் இப்ராகிமை சந்தித்தாரா? உத்தரபிரதேச மந்திரி குற்றச்சாட்டு

February 7th, 2016 latha Posted in இணையத்தள கட்டுரை No Comments »

modiகடந்த டிசம்பர் மாதம் 25–ந்தேதி ஆப்கானிஸ்தானுக்கு பயணம் செய்த பிரதமர் மோடி, இந்தியா திரும்பும் வழியில் திடீரென பாகிஸ்தானின் லாகூர் நகருக்கு சென்று பிரதமர் நவாஸ் ஷெரீப்பை சந்தித்து பேசினார்.இந்த பயணத்தின்போது மோடி, பாகிஸ்தானில் தலைமறைவாக உள்ள மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமை, நவாஸ்ஷெரீப்பின் வீட்டில் சந்தித்ததாக சமாஜ்வாடி Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர்களை விடுதலை செய்வது நாட்டுக்கு பாரதூரமான விளைவிகளை ஏற்படுத்தும்- கோதபாய ராஜபக்ஸ

February 5th, 2016 latha Posted in TELOnews, இணையத்தள கட்டுரை, இணையத்தள செய்தி No Comments »

koththaaதமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சிரேஸ்ட போராளிகள் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட வேண்டுமென முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.தமிழீழவிடுதலைப் புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர்களை கண்காணிப்பதற்கான சரியான பொறிமுறைமை ஒன்றை
அரசாங்கம் அமுல்படுத்த வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

பூமலர்ந்தான் கிராமத்து குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு – அமைச்சர் டெனிஸ்வரன்…

February 2nd, 2016 latha Posted in TELOnews, இணையத்தள கட்டுரை, இணையத்தள செய்தி No Comments »

denishமடு பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட பூமலர்ந்தான் கிராமத்தில் கடந்த ஆண்டு குடியமர்த்தப்பட்ட மக்கள் குடிநீர் தேவைக்கு பெரும் சிரமத்தை எதிர்நோக்கியவேளை, அங்குள்ள மக்களும் அதிகாரிகளும் வடக்கு கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களது கவனத்துக்கு கொண்டுவந்தனர், அதனைத் தொடர்ந்து அங்கு விஜயம்  மேற்கொண்ட அமைச்சர்  Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

மூன்று பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு கிளிநொச்சியில் சம்பவம்

February 1st, 2016 latha Posted in TELOnews, இணையத்தள கட்டுரை No Comments »

kiliகிளிநொச்சி பரந்தன் கரைச்சி வடக்கு பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் தலைமை அலுவலகத்திற்கு பின் புறமாக தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் காணப்பட்டுள்ளது.

Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

தமிழ் மக்களை தவறாக வழிநடத்தும் சில புலம்பெயர் தமிழ் இணைய ஊடகங்கள் : இரா.துரைரத்தினம்

November 2nd, 2015 Thulasi Posted in இணையத்தள கட்டுரை, இணையத்தள செய்தி No Comments »

tamilஇலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து மேற்குலக நாடுகளில் வாழும் இலங்கை தமிழர்கள் பலர் யதார்த்தங்களையும் உண்மைகளையும் அறியாதவர்களாக வாழ்கின்றார்கள் என்பதற்கு இலங்கையில் நடந்த இறுதிப்போரும் அதில் மரணமடைந்த விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் மீண்டும் வருவார் என நம்பியிருப்பதும் ஒர் ஆதாரமாகும். ஓவ்வொரு நவம்பர் மாதம் 27ஆம் திகதி வரும் போதும் விடுதலைப்புலிகளின் தலைவர் மாவீரர் தின உரைநிகழ்த்துவார் என மேற்குலக நாடுகளில் உள்ள தமிழர்கள் பலர் நம்புகின்றனர். இவ்வாறு மக்களை மாயை ஒன்றிற்குள் வைத்திருப்பதில் முக்கிய பங்காற்றுபவை மேற்குலக நாடுகளில் இருந்து இயக்கப்படும் இணையத்தளங்கள் எனலாம். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

முடியுமான அபிவிருத்தியை எனது காலத்தில் செய்துள்ளேன் புத்தளம் முன்னாள் நகர பிரதாவும், முன்னாள் கால்நடை வளத்துறை பிரதி அமைச்சருமான : கே. ஏ. பாயிஸ்

October 29th, 2015 Thulasi Posted in இணையத்தள கட்டுரை No Comments »

tkn-10-29-rm-91-hucஅரசியலில் இருந்து சற்று ஓய்வு எடுத்துக் கொண்டு தனது குடும்பத்தாரோடும், சொந்த நலன்களை கவனித்துக் கொண்டும் சந்தோசமாக பொழுதை கழித்து வரும் புத்தளம் முன்னாள் நகர பிரதாவும், முன்னாள் கால்நடை வளத்துறை பிரதி அமைச்சருமான கே. ஏ. பாயிஸ் வழங்கிய செவ்வியை இங்கு தொகுத்து வழங்குகிறோம். புத்தளம் நகரம் 1989 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய விகிதாசாரத் தேர்தல் முறைமையின் காரணத்தால் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இழக்க நேரிட்டது. புத்தளம் நகருக்கு கிடைக்க வேண்டிய அத்தனை அபிவிருத்திகளும் தடைப்பட்டன. புத்தளம் மாவட்டத்தின் அபிவிருத்தியில் வறுமை நிலை தோன்றியது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

ஜனாதிபதி நாளை அமெரிக்காவிற்கு விஜயம்

September 22nd, 2015 Thulasi Posted in இணையத்தள கட்டுரை, இணையத்தள செய்தி No Comments »

maithiri ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 23ஆம் திகதி அமெரிக்காவுக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டு உரையாற்றவுள்ளார். அத்துடன், இதன்போது அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவையும் சந்தித்து முக்கிய கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

அம்பாறை மாவட்ட சகல பிரதேசங்களையும் முஸ்லிம் காங்கிரஸ் அபிவிருத்தி செய்யும்

August 29th, 2015 Thulasi Posted in இணையத்தள கட்டுரை No Comments »

முஸ்லிம் காங்கிரஸிற்கு கிடைக்கவுள்ள அம்பாறை மாவட்டத்தின் அரசியல் அதிகாரத்தைக் கொண்டு சகல ஊருக்குமான அபிவிருத்திகள் பாரபட்சமின்றி harees-mpமேற்கொள்ளப்படும். இனிவரும் காலம் அம்பாறை மாவட்ட மக்களுக்கு ஒரு பொற்காலமாகும் என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார். நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்தில் வெற்றிபெற்று பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் வெற்றிக்கு வாக்களித்த வரிப்பத்தான்சேனை மற்றும் இறக்காமம் பிரதேச மக்களுக்கு நன்றி தெரிவிக்க நேற்று முன்தினம் (27) விஜயம் செய்தார். அங்கு ஹரீஸ¤க்கு அப்பிரதேச மக்களால் வரவேற் பளிக்கப்பட்டது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

இலங்கையின் உள்ளக விசாரணையில் சற்றும் நம்பிக்கையில்லை :வழக்கறிஞர் கே.எஸ். ரட்ணவேல்

August 28th, 2015 Thulasi Posted in இணையத்தள கட்டுரை No Comments »

KANAMALஇலங்கையில் போர்க்கால குற்றங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அங்கு நடக்கக்கூடிய உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையில் சற்றும் நம்பிக்கை இல்லை என்று பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் விசாரணை ஆணைக்குழுக்களில் ஆஜராகி வாதிட்டு வந்துள்ள மூத்த வழக்கறிஞர் கே.எஸ். ரட்ணவேல் கூறுகின்றார். கடந்த கால அனுபவங்களே இந்த நிலைப்பாட்டுக்கு காரணம் என்றும் அவர் தெரிவித்தார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

251 தீவிரவாதிகள் கைது: துருக்கியில் போலீஸ் அதிரடி வேட்டை

July 25th, 2015 Thulasi Posted in இணையத்தள கட்டுரை No Comments »

துருக்கி நாட்டில் ஐ.எஸ். தீவிரவாதிகள் மற்றும் குர்து இன போராளிகளை தேடும் வேட்டையை போலீஸ் அதிரடியாக நடத்தியது. அந்த நாட்டின் 13 மாகாணங்களில் நடத்தப்பட்ட இந்த தேடுதல் வேட்டையில் மொத்தம் 251 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். இது குறித்து துருக்கி பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், “தீவிரவாத குழுக்களை எந்தவித பாகுபாடுமின்றி ஒடுக்குவதற்கு துருக்கி உறுதியாக உள்ளது” என கூறப்பட்டுள்ளது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button