அரசியலாக்கப்படும் இலங்கைத் தமிழ்ப் பெண்களின் சமுதாய நிலை

August 24th, 2011 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

இலங்கையின் பல பகுதிகளிலும் பெண்களைத் தாக்கும் மர்ம மனிதர்கள் நடமாடுவதாகவும் இதனால் இலங்கை புராவும் மக்கள் பீதியடைந்திருப்பதாகவும் பத்திரிகைகள் எழுதிக்கொண்டிருக்கின்றன. அண்மைக்காலங்களில் வரும் செய்திகளின்படி , இந்த மர்மமனிதர்கள் இலங்கை அரசால் தமிழ்ப் பெண்களை அவமானம் செய்ய ஏவப்பட்டதாகத் தமிழ்ப் பத்திரிகைகள் ஓலமிடத் தொடங்கியிருக்கின்றன. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

சர்ச்சைக்குரிய தருஸ்மன் அறிக்கையை ஐ.நா. மனித உரிமை பேரவையில் பரிசீலனைக்கு எடுக்க முடியாது: பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ்

August 19th, 2011 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் ஆலோசனைக் குழுவினர் தயாரித்த தருஸ்மன் அறிக்கையை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) பரிசீலனைக்கு சமர்ப்பிக்க முடியாது என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் அறிவித்துள்ளார். தருஸ்மன் அறிக்கை ஒரு உத்தியோகபூர்வ ஆவணமோ, சட்டபூர்வமான ஆவணமோ அல்ல. எனவே, அது பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வது அருகதையற்றது என்று பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் அறிவித்துள்ளார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

Anna Hazare and me…

August 19th, 2011 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

My support for Anna Hazare stems not just from my convictions, but out of personal experience too. My grandfather was a civil engineer with the municipal authorities in Simla and there was a contract to be awarded to construct a road and a helipad. A contractor came with a  Rs 30,000 bribe so that he can get the contract from my grandfather. My grandfather resigned from the job. When his supervisor asked him why he wanted to resign, he said, “ Today I may not need the money, but tomorrow a need may arise enticing me to accept it. …. If many many years later, I can tell my grandson tales about how I didn’t bow down to corruption, my life is worth it.” Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

நமது அரசியலும், அரசியலின் அரசியலும்: யதீந்திரா

July 26th, 2011 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

அரசியலின் இயங்குநிலை சதா மாறிக் கொண்டிருக்கிறது. மாற்றங்களுக்கு ஏற்ப சிந்தனை – மீள்சிந்தனை என்னும் அடிப்படையில்தான் நமது சிந்திப்பும் நிகழ்ந்து வருகின்றது. எவரொருவர் புறநிலைமைகளை உள்வாங்கிச் சிந்திக்கின்றாரோ அவரது சிந்திப்பு மாறிக் கொண்டே இருக்கும். அவர் முன்னர் கூறிய விடயங்களை அவரே மறுக்கவும் நேரலாம். காரணம் புறநிலைமைகள் அவரை அவ்வாறு நிர்ப்பந்திக்கின்றது. மனிதர்கள் புறநிலைமைகள் மீது தாக்கம் செலுத்துகின்றனர், புறநிலைமைகள் அவர்கள் மீது தாக்கம் செலுத்துகின்றன. இறுதியில் அவன் – அது இரண்டுமே மாற்றத்திற்கு உள்ளாகின்றன. இதுதான் சிந்திப்பின் அடிப்படையாக இருக்கிறது. நமது சிந்திப்பு மாற்றத்திற்கானது எனின், நாம் ஏன் மாற்றங்களைக் கண்டு அஞ்ச வேண்டும்? Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

பேராசிரியர் கா.சிவத்தம்பி காலமானார் : ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்

July 7th, 2011 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

புகழ்பெற்ற அறிஞர்களுள் ஒருவரான பேராசிரியர் கார்த்திக்கேசு சிவத்தம்பி தனது 79 ஆவது வயதில் புதன்கிழமை கொழும்பில் காலமாகியுள்ளார். 1932 ஆம் ஆண்டு, யாழ்ப்பாணம் கரவெட்டியில் பிறந்த அவர் தனது பாடசாலைக் கல்வியின் பெரும்பகுதியை கொழும்பு ஸாஹிரா கல்லூரியில் பயின்றார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கை மீது வழக்கு தொடர மன்னிப்புச் சபை முடிவு

June 26th, 2011 Thulasi Posted in இணையத்தள கட்டுரை, இணையத்தள செய்தி No Comments »

இலங்கைக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர சர்வதேச மன்னிப்புச் சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சனல் 4 தொலைக்காட்சி இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல் காட்சிகளை வெளியிட்டது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

வரலாற்றில் இருந்து கற்றுக் கொள்ளுதல் என்றால் என்ன? -யதீந்திரா

June 13th, 2011 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

சில விடயங்கள் குறித்து என்னதான் பேசினாலும், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அவை அனைத்தும் எருமை மாட்டில் மழை பெய்த கதையாகவே விரயமாகிறது. எவ்வாறு இந்த நிலைமைகளை தெளிவுபடுத்தலாம்? எவ்வாறு ஒரு ஆரோக்கியமான உரையாடல் பரப்பை உருவாக்கலாம்? நம்மால் அது முடியுமா? எல்லாமே சந்தேகமாகவே இருக்கிறது. இருப்பினும் மக்கள் நலனில் அக்கறையுள்ளவர்கள் முருங்கை மரத்து வேதாளத்தைத் திருப்திப்படுத்த முயன்ற விக்கிரமாதித்தியன் போல், தங்களால் முடிந்தளவு எழுதியும் பேசியும் வருகின்றனர். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

மரணத்துக்குக் குழிதோண்டும் புகைபழக்கம்

May 31st, 2011 Thulasi Posted in இணையத்தள கட்டுரை No Comments »

கலங்களால் உருவாக்கப்பட்ட உடலமைப்பிற்கு கடவுளால் ஆறறிவு ஊட்டப்பட்டு தோற்றம் பெற்றவர்களே மனிதர்களாகிய நாம். அந்த கலங்களுக்கு நெருப்பை ஊட்டும் நெஞ்சங்களுக்கு விழிப்புணர்வூட்டும் விதமாக உலக சுகாதார நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டு உலகெங்கும் மே 31 ஆம் நாளன்று அனுஷ்டிக்கப்படும் தினமே இப்புகையிலை எதிர்ப்பு தினமாகும் உலகளாவிய ரீதியில் மரணத்தை விளைவிக்கும் காரணிகளில் இரண்டாம் இடத்தைவகிப்பது புகையிலை பாவனை என்பது குறிப்பிடத்தக்கதாகும். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

அவர்களின் திறமையும் எங்களின் பலவீனமும்

February 10th, 2011 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

யாழ்ப்பாணத்தவர்கள் வேலை செய்வதில் பின்னிற்பவர்கள் மட்டுமல்ல, இன்ன வேலை என்றால்தான் அதைச் செய்யமுடியும் என்றும் நிபந்தனை விதிப்பவர்கள். இதனால் அவர்கள் வேலை செய்யக்கூடிய பொன்னான காலத்தை வீணடிக்கின்றனர். இப்போதெல்லாம் தென் பகுதியைச் சேர்ந்த பலர் யாழ்ப்பாணத்தில் எத்தனையோ வகையில் பணம் சம்பாதிக்கின்றனர். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

தீதும் நன்றும் பிறர்தர வாரா

September 26th, 2010 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

“புலம் பெயர் தமிழர்கள் இலங்கை அரசாங் கத்தைச் சாதகமான கோணத்திலிருந்து பார்க்க வேண்டிய காலம் உருவாகியிருக்கின்றது. இவர்கள் தங்களுடைய பழைய நிலை ப்பாட்டில் தொங்கிக்கொண்டிராமல், பிரச்சினையின் தீர்வுக்காகப் பாராளுமன்ற நடைமுறைக்கூடாக ஜனநாயகப் பாதையில் செல்வதற்குத் தயாராக வேண்டும்.’’ இப்படிக் கூறியவர் நோர்வே அமைச்சர் எரிக் சோல்ஹெய்ம். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

வரலாற்றுக் கடமை : வி. தேவராஜ்

September 23rd, 2010 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ்க் கட்சிகளின் அரங்கமும் தமிழ் மக்களுக்கான ஒரு அரசியல் தீர்வுப் பொதியினை முன் வைக்க வேண்டு மென்ற கோரிக்கையை இப்பந்தியில் முன் வைத்திருந்தோம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும், தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தையும் தவிர பல தரப்பினரும் இந்தக் கோக்கை குறித்து சாதகமாகவே பரிசீலித்தனர். கருத்துக்களையும் தெரிவித்திருந்தனர். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

திருக்குறளுக்கும் கல்வியியலுக்குமான புதிய பார்வை – புதிய பங்களிப்பு

September 22nd, 2010 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

‘திருக்குறளில் கல்விச் சிந்தனைகள் ஒரு சமூக நோக்கில் மறுவாசிப்பு’ என்ற நூல் கலாநிதி ந. இரவீந்திரனால் எழுதப்பட்டு வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தின் (விஞ்சு பதிப்பகத்துடன் இணைந்து) வெளியீடாக வெளிவந்துள்ளது.

பொதுவாகவே கலாநிதி ந.இரவீந்திரனின் எழுத்துக்கள் சமூக அநீதியையும் அடக்குமுறையையும் அவற்றுக்குரிய பண்பாட்டு தளத்தில் அடையாளம் கண்டு அதற்கு எதிரான பார்வையை வெளிப்படுத்தியுள்ளன.

இந்நிலையில் திருக்குறளின் வழி கல்வி சிந்தனைக் குறித்த ஆய்வையும் புதியதோர் கோணத்தில் ஆய்வு செய்ய முனைகின்றது இந்நூல். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

ஐ.நா. சபையில் பெண்கள் அமைப்பு

September 16th, 2010 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

ஐ.நா. சபையில் சுகாதாரத்திற்கு, குழந்தைகளுக்கு, தொழிலாளர்களுக்கு என்று ஒவ்வொரு துறை சார்ந்து தனித்தனியாக அமைப்புகள் உண்டு. பெண்களுக்கு? இது வரை இல்லை. அந்தக் குறை நீங்கிவிட்டது. பாலினச் சமத்துவத்தை நோக்கமாகக் கொண்டு ஐ.நா.விற்கான பெண்கள் அமைப்பு தொடங்கப்படுகிறது இந்த அமைப்பை உருவாக்க ஆதரவு தெரிவித்து 192 வாக்குகள் கிடைத்திருக்கின்றன. எந்தவித எதிர்ப்புமின்றி இத்தீர்மானம் நிறைவேறியிருக்கிறது. ‘ஐக்கிய நாடுகள் சபை மகளிர் அமைப்பு’ என்ற பெயரில் இவ்வமைப்பு செயல்படவிருக்கிறது. ஆங்கிலத்தில் ‘UN Women’ என்றழைக்கப்படும். இதற்கான தீர்மானம் ஜூன் 30 அன்று நிறைவேற்றப்பட்டது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

நொந்து போன மக்களின் எதிர்கால விமோசனத்துக்காகச் சிந்திப்பதே இன்று பிரதானமாகும்.

September 6th, 2010 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

புலிகள் இயக்கத்தில் முன்னர் உறுப்பினர்களாகவிருந்தோரில் 508 பேர் நேற்று முன்தினம் வவுனியா, பம்பைமடுவில் உள்ள புனர்வாழ்வு நிலையத்தில் வைத்து அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இவர்களெல்லாம் ஒரு வருட காலத்துக்கு முன்னர் ஆயுதமேந்தி யுத்தம் புரிந்தவர்கள்.

புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டதையடுத்து இராணுவத்தினரிடம் சரணடைந்த மற்றும் அகப்பட்டுக்கொண்ட இவர்கள் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட நிலையில் இப்போது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

கொச்சைப்படுத்துவது இழுக்கு

September 5th, 2010 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

கொழும்பில் 2011 ஜனவரியில் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாடு நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றன. இந்த மகா நாட்டைப் புறக்கணிக்க வேண்டும் என்ற குரல் தமிழ் நாட்டிலிருந்து எழுகின்றது. இலங்கையின் இனப்பிரச்சினையைக் கையாளத் தெரியாமல் நந்தவன ஆண்டியைப் போலப் போட்டுடைத்துத் தமிழ் மக்களை அவல நிலைக்குத் தள்ளியவர்களுக்குத் துதி பாடியவர்களே புறக்கணிப்புக் கோரிக்கையை முன்வைக்கின்றார்கள். இலங்கைத் தமிழ் எழுத்தாளர் என்ற முத்திரையைக் குத்திக்கொண்டவர்களும் இருவர் இந்தக் கூட்டத்தில் உள்ளனர். இவர்கள் இலங்கை மண்ணில் காலடி வைத்துப் பல தசாப்தங்கள் ஆகிவிட்டது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button