வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடியில் 132 பேர் கைது

January 25th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

வெளிநாடுகளுக்கு செல்வதற்காக சட்டவிரோத நிறுவனங்களுக்கு பணம் வழங்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2024 ஆம் ஆண்டில் மோசடி செய்பவர்களுக்கு பணம் கொடுக்கும் சம்பவங்களில் 27% அதிகரிப்பு காணப்படுவதாக பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

யோஷித ராஜபக்ஷ கைது

January 25th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ இன்று (25) காலை பெலியத்த பகுதியில் வைத்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

வாழைச்சேனையில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் : 8 பேர் வைத்தியசாலையில் அனுமதி

January 25th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற தகராறு காரணமா இதுவரை எட்டுப் பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் நேற்று (24) செம்மண்ணோடையில் இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

January 25th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களுடன் நபரொருவர் கைது

January 25th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

குற்றம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக பொலிஸ் விசேட அதிரடிப் படையின் சிறப்பு நடவடிக்கைப் பிரிவினரால் நேற்று (24) மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது, ​​போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தப்பிச் சென்ற கைதி மதுபோதையில் கைது

January 25th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

சிறைச்சாலை அதிகாரிகளிடமிருந்து தப்பிச் சென்ற சந்தேக நபர் மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்த போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

அதிக விலைக்கு அரிசி விற்பனை தொடர்ந்து சுற்றிவளைப்பு

January 25th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்வது தொடர்பில் கடந்த சில நாட்களில் நுகர்வோர் விவகார அதிகார சபை நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றிவளைப்புகளை மேற்கொண்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

புலிகள் தலைவருடன் எடுத்த படம் எடிட் செய்யப்பட்டதா? சீமான் ஆவேசம்

January 25th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழீழ விடுதலை புலிகள் தலைவருடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை எடிட் செய்து கொடுத்ததே நான்தான் என்று இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் கூறிய தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சீமானின் புகைப்படம் குறித்த ஆதாரத்தை வெளியிட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கூறி வந்தனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

சேருவில – தங்கநகர் பகுதியில் நிறுத்தியிருந்த டிமோ பட்டா மீது வேன் மோதி விபத்து

January 25th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

சேருவில – தங்கநகர் பகுதியில் நிறுத்தியிருந்த டிமோ பட்டா வாகனத்துடன் வேன் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ் விபத்து சம்பவம் வெள்ளிக்கிழமை (24) மாலை இடம் பெற்றுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

வரலாற்றில் முதன்முறையாக  பாராளுமன்றத்தில் கொண்டாடப்பட்ட தைப்பொங்கல் விழா

January 25th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

தைப்பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில் இலங்கை பாராளுமன்ற வளாகத்தில் தைப்பொங்கல் தின நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை வைபவரீதியாக சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் இடம்பெற்றது. வரலாற்றில் முதன்முறையாக இலங்கை பாராளுமன்றத்தினால் கொண்டாடப்பட்ட தைப்பொங்கல் தினமாக இதுகருதப்படுகிறது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

அதானியின் காற்றாலை திட்டம் இரத்து செய்யப்படவில்லை

January 25th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

மன்னார் மற்றும் பூநகரியில் அமையவுள்ள அதானியின் 484 MW காற்றாலை மின் திட்டங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளிவரும் செய்திகள் தவறானவை என அதானி குழுமம் தெரிவித்துள்ளது. விசேட ஊடக அறிக்கை ஒன்றை வௌியிட்டு அதன் பேச்சாளர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மன்னாரில் காற்றாலை மின்திட்டம் அதானிக்கு வழங்கிய அனுமதி இரத்து

January 24th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

மன்னார் பூநகரி காற்றாலை மின்திட்டத்தை முன்னெடுப்பதற்கு, இந்தியாவின் அதானி குழுமத்திற்கு கடந்த வருடம் அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் வழங்கிய அனுமதியை அமைச்சரவை இரத்து செய்துள்ளது என தெரியவருகின்றது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

யாழ்.கலாசார மையத்தின் பெயர் நாளுக்கு நாள் மாறும் பெயரால் பொதுமக்கள் கடும் விசனம்

January 24th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இந்திய நிதியுதவியில் யாழ்ப்பாணத்தில் கட்டப்பட்டுள்ள யாழ்ப்பாணம் கலாசார மண்டபம் தற்போது மூன்றாவது முறையாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி குறித்த மண்டபம், தற்போது யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு, பெயர் பலகை பொருத்தப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பெண்களை தாக்கி தொலைபேசியை கொள்ளையடித்த இருவர் கைது

January 24th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

வவுனியா – ஓமந்தை பகுதியில் நேற்று (23) முற்பகல் பெண்களை வழிமறித்து தாக்கிவிட்டு, அவர்களின் கையடக்க தொலைபேசியை பறித்துச் சென்ற இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

உள்நாட்டு துப்பாக்கிகளுடன் இரு சந்தேக நபர்கள் கைது

January 24th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

கிரிபாவ, சங்கப்பாலய வெல்யாய பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் 48 வயதான கல்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய நேற்று வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போதே குறித்த நபர் கைதாகியுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button