இலங்கை சிறார்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் புகைப்படங்களை இணையத்தில் சிலர் வெளியிடுவதாக அமெரிக்க நிறுவனமான “நெக்மேக்” வெளியிட்ட தகவல் தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்தி நீதிமன்றத்திற்கு சமர்ப்பணங்களை முன்வைக்குமாறு பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் முன்வைத்த சமர்ப்பணங்களை கருத்திற்கொண்டு கொழும்பு மேலதிக நீதவான் கெமிந்த பெரேரா இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
Read the rest of this entry »















