ஹோர்முஸ் நீரிணை மீண்டும் மூடப்பட்டமைக்கு ட்ரம்ப் அதிருப்தி

April 10th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஹோர்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் கொண்டு செல்லப்படுவதை ஈரான் கையாளும் விதம் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்துள்ளார். இரண்டு வார காலம் போர் நிறுத்தம் அமுலாகிய நிலையில், இஸ்ரேல் லெபனானில் தாக்குதல்களை நடத்தியது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஹார்முஸ் ஜலசந்தியில் 15 கப்பல்களுக்கு மட்டுமே அனுமதி: உலக நாடுகளுக்குப் புதிய நெருக்கடி

April 10th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே பாகிஸ்தான் முன்னிலையில் எட்டப்பட்டுள்ள 14 நாள் போர்நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, உலகின் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) “திறக்கப்பட்டுள்ளதாக” ஈரான் உறுதி செய்துள்ளது. இருப்பினும், ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 15 கப்பல்கள் மட்டுமே இந்தப் பாதையைப் பயன்படுத்த முடியும் என ஈரான் நிபந்தனை விதித்துள்ளது. போருக்கு முன்பு நாளொன்றுக்குச் சராசரியாக 140-க்கும் மேற்பட்ட கப்பல்கள் பயணித்த இந்தச் சர்வதேசப் பாதையில், தற்போது வெறும் 10 சதவீத போக்குவரத்தை மட்டுமே அனுமதிப்பது, உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் பெரும் தட்டுப்பாட்டை உருவாக்கும் என அஞ்சப்படுகிறது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஈரான் போர் நிறுத்தத்திற்கு மத்தியில் லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: 254 பேர் பலி, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம்

April 10th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஈரான் போர் நிறுத்தத்திற்கு மத்தியில் நேற்று லெபனான் மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில் 254 பேர் பலியானார்கள். ஈரானுடனான போரை இரண்டு வார காலத்துக்கு நிறுத்துவதாக அதிபர் டிரம்ப் அறிவிப்பை தொடர்ந்து ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியும் போர் நிறுத்தத்தை உறுதிபடுத்தினார். இந்த அறிவிப்பை தொடர்ந்து பாகிஸ்தானில் அமெரிக்கா மற்றும் ஈரான் பிரதிநிதிகள் குழு நிரந்தர போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபடப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நேபாள முன்னாள் பிரதமர் ஜாமீனில் விடுவிப்பு

April 10th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

நேபாளத்தில் அரசுக்கு எதிராக ஜென் ஸி இளையதலைமுறையினர் நடத்திய போராட்டத்தில் பயங்கர வன்முறை ஏற்பட்டது. இதனால்,அப்போதைய பிரதமர் கே.பி.சர்மா ஒலி பதவி விலகினார். அதன் பின்னர் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் புதிய பிரதமராக பாலேந்திர ஷா சமீபத்தில் பதவியேற்றார். போராட்டத்தில் 76 பேர் உயிரிழப்புக்கு காரணமான முன்னாள் பிரதமர் சர்மா ஒலி, முன்னாள் உள்துறை அமைச்சர் ரமேஷ் லேக்காக் ஆகியோர் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கொத்து குண்டு ஏவுகணை சோதனை நடத்தினோம்: வடகொரியா

April 10th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

வடகொரியாக இந்த வாரம் கொத்து குண்டு பாலிஷ்டிக் ஏவுகணை உட்பட பல்வேறு புதிய ஆயுதங்களை சோதனை செய்ததாக அறிவித்துள்ளது. வடகொரியா தனது அண்டை நாடான தென்கொரியாவை இலக்காக கொண்டு அணுசக்தி திறன் கொண்ட படைகளை விரிவுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. தொடர்ந்து தென்கொரியாவை அச்சுறுத்தும் வகையில் ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகின்றது. இதனிடையே கடந்த இரண்டு நாட்களாக வடகொரியா பல்வேறு ஏவுகணைகளை ஏவியதாக தென்கொரிய ராணுவம் அறிவித்தது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பிரான்சில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 19 வயது இளைஞன் நகரசபை உறுப்பினராக தெரிவு

April 10th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பிரான்ஸின் கயன்கோர்ட் உள்ளூராட்சித் தேர்தலில், 18 வயது இலங்கை வம்சாவளி மாணவர் பிலால் லுக்மான் நகரசபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டு புதிய சாதனை படைத்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஹிஸ்புல்லாவைக் குறிவைத்து இஸ்ரேல் 100 இடங்களில் தாக்குதல்

April 9th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான 14 நாட்கள் போர்நிறுத்த ஒப்பந்தம் லெபனானுக்குப் பொருந்தாது என அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இது குறித்துப் பேசிய அவர், “ஹிஸ்புல்லா அமைப்பு இந்த ஒப்பந்தத்தில் ஒரு பகுதியாக இல்லை; அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார். ஈரானுடன் அமைதி நிலவினாலும், இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையிலான மோதலை ஒரு “தனிச் சண்டை” (Separate Skirmish) என்று டிரம்ப் வர்ணித்துள்ளார். இதனால், லெபனான் மீது இஸ்ரேல் தனது தாக்குதல்களைத் தொடர அமெரிக்கா பச்சைக்கொடி காட்டியுள்ளது உறுதியாகியுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மோதல் பகுதிகள் முழுவதும் போர்நிறுத்த மீறல்கள் பதிவாகியுள்ளன: பாகிஸ்தான் பிரதமர் கவலை

April 9th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தம் ஒரு மெல்லிய நூலிழையில் ஊசலாடி வரும் நிலையில், போர் மண்டலத்தின் பல்வேறு பகுதிகளில் துப்பாக்கிச் சூடு மற்றும் தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாகப் பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ‘X’ சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “போர் நடைபெறும் பகுதிகளில் ஒரு சில இடங்களில் போர்நிறுத்த விதிமீறல்கள் பதிவாகியுள்ளன. இது ஒட்டுமொத்த அமைதி முயற்சியின் நோக்கத்தையே சீர்குலைக்கும் வகையில் உள்ளது” என்று எச்சரித்துள்ளார். இந்த விதிமீறல்கள் குறித்துப் பாகிஸ்தான் அரசு உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கனடாவில் ஏப்.1 முதல் குடியேற்ற விதிகள், விசா கட்டணம், பணி அனுமதியில் மாற்றம்

April 9th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கனடா அரசு குடியேற்ற விதிகளில் பல்வேறு மாற்றங்களை அமல்படுத்தியுள்ளது. இந்த மாற்றங்களுக்கு பிறகு 10 ஆண்டு கால வயது வந்தோருக்கான பாஸ்போர்ட்டின் கட்டணம் 163 டாலர் என உயர்த்தியுள்ளது. 5 ஆண்டு வயது வந்தோருக்கான பாஸ்போர்ட் கட்டணம் 122 டாலராக உயர்த்தப்பட்டுள்ளது. அதே போல் குடியுரிமைக்கான கட்டணங்களும் சிறிதளவு அதிகரித்துள்ளன.இந்த மாற்றங்கள் ஏப்.1 முதல் அமலுக்கு வந்துள்ளன.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

வடகொரியா ஏவுகணை சோதனை

April 9th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

வடகொரியா இரண்டாவது நாளாக நேற்று இரண்டாவது ஏவுகணை சோதனையை நடத்தியது.வடகொரியாவுடனான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும் என்ற தனது நம்பிக்கையை தென்கொரியா அரசு வெளிப்படுத்தியது. ஆனால் தென்கொரியாவின் அரசுடன் உறவுகளை மேம்படுத்தும் எண்ணம் தங்களுக்கு இல்லை என்பதை வடகெரியா தெளிவுபடுத்தியது. இதனை தொடரந்து வடகொரியா அடுத்தடுத்து ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

அமெரிக்கா – ஈரான் போர் நிறுத்தத்தில் பாக். பங்கு மோடியின் ராஜதந்திரத்துக்கு மிகப்பெரிய தோல்வி: காங். கடும் விமர்சனம்

April 9th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி முதல் ஈரான் மீது கடும் தாக்குதல் நடத்தி வந்தன. இதில் ஈரானின் உச்ச தலைவர்உட்பட பலர் கொல்லப்பட்டனர். இதற்கு ஈரானும் தக்க பதிலடி கொடுத்து வந்தது. மேலும் உலகின் கடல்வழி வணிகத்துக்கு மிகவும் முக்கிய நீர்வழிப்பாதையான ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியதால், எரிபொருள் தட்டுப்பாடு, விலை உயர்வு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த சூழலில் பாகிஸ்தானின் மத்தியஸ்தம் காரணமாக அமெரிக்காவும், ஈரானும் 2 வார கால போர் நிறுத்தத்துக்கு ஒப்பு கொண்டுள்ளன.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இந்தியாவில் கடற்கரை பராமரிப்பு ரொம்ப மோசம் இலங்கை கடற்கரை சூப்பர்: பிரான்சில் வசிக்கும் இந்திய பெண் ஆதங்கம்

April 9th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

சுற்றுலா சென்ற இடத்தில் வெளிநாட்டு கடற்கரையின் தூய்மையை கண்டு இந்திய பெண் ஒருவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். பிரான்ஸ் நாட்டில் வசித்து வரும் இந்தியரான மெஹைக் என்பவர், சமீபத்தில் இலங்கைக்கு சுற்றுலா சென்றார். அங்குள்ள கடற்கரைகளை பார்வையிட்ட அவர், அதன் தூய்மையைக் கண்டு வியப்படைந்ததுடன், இந்தியாவுடன் ஒப்பிட்டு சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், ‘இலங்கை நாடு என்னை சங்கடப்பட வைத்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

அனலைதீவு பகுதியில் துப்பாக்கி அவற்றுக்கான மகசீன்கள் இரண்டு மீட்பு

April 8th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

யாழ்ப்பாணம் அனலைதீவு பகுதியில் துப்பாக்கி , அவற்றுக்கான மகசீன்கள் இரண்டு மற்றும் ஒரு கைக்குண்டு என்பன அடையாளம் காணப்பட்டுள்ளன. அனலைதீவில் உள்ள தனியார் காணி ஒன்றினை நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை காணி உரிமையாளர் துப்பரவு செய்த வேளை துப்பாக்கி , அவற்றுக்கான இரண்டு மகசீன்கள் மற்றும் கைக்குண்டு என்பவற்றை கண்டு அது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்திருந்தார். 

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இடைக்கால போர் நிறுத்தம் : ஈரான் மற்றும் பாகிஸ்தான் பரஸ்பரம் நன்றி தெரிவிப்பு

April 8th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இடைக்கால போர் நிறுத்தத்திற்கு அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் நாடுகள் சம்மதம் தெரிவித்து உள்ளதால் மேற்காசிய பிராந்தியத்தில் போர் பதற்றம் படிப்படியாக தணிகிறது. போர் நிறுத்த அறிவிப்பு தங்களுக்கு கிடைத்த வெற்றி என ஈரான் நாட்டின் வெளியுறவு துறை அமைச்சர் சையத் அப்பாஸ் அறிவித்து உள்ளார். லெபனான் மற்றும் பிற இடங்கள் உட்பட அனைத்து இடங்களிலும், உடனடியாக அமலுக்கு வரும் வகையில் போர் நிறுத்தத்தை மேற்கொள்ள அமெரிக்கா, இஸ்ரேல் ஒப்பு கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கள் இறக்கிய தொழிலாளி மீது துப்பாக்கிச் சூடு: 3 காவலர்கள் மீது வழக்குப்பதிவு

April 8th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மருதம்புத்தூர் பகுதியில் கள் இறக்கிய புகாரில் விசாரிக்கச் சென்ற போது போலீசாரை தாக்கியதாக மணிகண்டன் என்பவர் துப்பாக்கியால் சுடப்பட்டு பிடிக்கப்பட்ட விவகாரத்தில், 3 போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மணிகண்டனின் குடும்பத்தினர், உறவினர்கள் நேற்றிரவு போராட்டம் நடத்திய நிலையில், எஸ்.ஐ இசக்கி ராஜா உள்பட மூவர் மீது 4 பிரிவுகளின் கீழ் ஆலங்குளம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே மருதம்புத்தூர் பகுதியை சேர்ந்தவர் பெருமாள் சேட்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button