இன்று உலக இதய தினம்

September 29th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29 ஆம் திகதி, இதய நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இதய தினம் கொண்டாடப்படுகிறது. உலகில் ஏற்படும் அதிக மரணத்திற்கு முக்கிய காரணமாக இதய நோய் கருதப்படும் நிலையில், உலக இதய தின அறிவிப்பு அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் மற்றும் ஏற்படக்கூடிய இறப்புகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

விஜய் கைது செய்யப்படும் வாய்ப்பு?

September 28th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கரூரில் தமிழக வெற்றிக் கழகம் நடத்திய அரசியல் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 9 குழந்தைகள் உட்பட 39 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவத்திற்கு பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

‘ 9 குழந்தைகள், 17 பெண்கள்’ துயரத்தின் முகமான கரூர்- உடல்களை எடுத்துச் செல்ல அணிவகுக்கும் ஆம்புலன்ஸ்கள்

September 28th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பிரச்சாரம் செய்த கூட்டத்தில், அதிமான மக்கள் கூடியதால் கடும் நெரிசல் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பலர் மயக்கமடைந்த நிலையில் 39 பேர் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய் பேசிவிட்டு அங்கிருந்து சென்ற பின்பு, கூட்டம் கலைந்த போது தான் குழந்தைகள், பெண்கள் என 20க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்திருந்தது தெரியவந்ததாகக் கூறப்படுகிறது. உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கரூரில் 39 பேர் பலி தவெக விஜய் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு

September 28th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

விஜய்யின் பிரச்சாரம் நேற்று நாமக்கல் மற்றும் கரூரில் நடைபெற்றது. இதில் பிற்பகல் நாமக்கல் பரப்புரையை முடித்துவிட்டு, இரவு 7 மணிக்கு கரூருக்கு வந்தடைந்தார். அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி மக்கள் அவதிப்பட்டனர். இதில் மருத்துவமனையில் பலரும் அனுமதிக்கப்பட்ட நிலையில், 39 பேர் பலியாகியுள்ளனர். இது மீளாத்துயரத்தை கொடுத்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் கரூர் சென்று தனது அஞ்சலியை செலுத்தினார். மேலும் இன்று காலை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து, உயிரிழந்தவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

அநுரவின் ஐ.நா உரையும் சர்வதேச அரசியல் பின்னணியும் : இலங்கை இராணுவத்துக்கு ஐநா பயிற்சி

September 28th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஜெனீவா மனித உரிமைச் சபையில் இலங்கைத்தீவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் பற்றிய சர்வதேச விசாரணை என்று தொடர்ச்சியாகப் பேசப்பட்டு வரும் பின்னணில், ‘இலங்கை அரசு’ என்ற கட்டமைப்பை காப்பாற்றும் முயற்சியிலேயே மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகள் தீவிரமாக ஈடுபடுகின்றன.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

விஜயின் அரசியல் கூட்டம் : பலி எண்ணிக்கை அதிகரிப்பு

September 28th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

நடிகர் விஜயின் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் நேற்று கரூரில் நடத்திய அரசியல் கூட்டத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் 5 சிறுவர்களும், 5 சிறுமிகளும், 17 பெண்களும், 12 ஆண்களும் அடங்குகின்றனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை சந்தித்த அனுர

September 27th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை சந்தித்து சுமூகமான உரையாடலில் ஈடுபட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்ள நியூயோர்க் நகரத்திற்கு வருகை தந்திருந்த அரச தலைவர்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்,

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஜனாதிபதி இன்று ஜப்பான் பயணம்

September 27th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (27) ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை ஆரம்பிக்கவுள்ளார். ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி இன்று முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்வார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

யாத்திரீகர்கள் சென்ற வேன் மரத்தில் மோதி கோர விபத்து

September 27th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

மஹியங்கனை – கிராதுருக்கோட்டை பிரதான வீதியில் உள்ள சொரபோர வெவ முதலாம் தூண் பகுதியில் யாத்திரீகர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

அனைத்து வரி செலுத்துவோருக்கும் அறிவுறுத்தல்

September 27th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

2025 செப்டம்பர் 30 அல்லது அதற்கு முன் வரிகளை செலுத்துமாறு அனைத்து வரி செலுத்துவோருக்கும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பிரசவத்தின் போது இரட்டை சிசுக்களும் தாயும் உயிரிழப்பு

September 27th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

யாழ். போதனா வைத்தியசாலையில் இரட்டை சிசுக்கள் அறுவைச் சிகிச்சை மூலம் பிரசவித்த போது உயிரிழந்த நிலையில் மயக்கமடைந்த நிலையில் இருந்த தாயும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கைதில் இருந்து தப்பிக்க புதிய வழியில் பறந்த நெதன்யாகுவின் விமானம்?

September 27th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இஸ்ரேலில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகரத்துக்குச் சென்ற இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் விமானம் வழக்கமான பாதையைத் தவிர்த்து புதிய பாதையில் பயணித்துள்ளது.ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொது அவைக் கூட்டம், நியூயார்க் நகரில் நடைபெற்று வருகின்றது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

முட்டாள் என்று தேடினால் ட்ரம்ப் படம் கூகுள் சுந்தர் பிச்சை கொடுத்த விளக்கம்

September 27th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கூகுளில் ‘முட்டாள்’ என்று தேடினால் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் படம் ஏன் வருகிறது என்பது குறித்து அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை விளக்கம் அளித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இன்றைய வானிலை

September 27th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மன்னாரில் பொது மக்கள் மீது பொலிஸார் தாக்குதல்

September 27th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

மன்னாரில் காற்றாலை மின் திட்டத்துக்கு எதிராக மக்கள் தொடர்ச்சியாகப் போராடி வரும் நிலையில், மக்களின் விருப்பத்திற்கு மாறாக காற்றாலைகளை தீவுக்குள் கொண்டு செல்வதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button