அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை சந்தித்த அனுர
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை சந்தித்து சுமூகமான உரையாடலில் ஈடுபட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்ள நியூயோர்க் நகரத்திற்கு வருகை தந்திருந்த அரச தலைவர்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்,
கடந்த 23 ஆம் திகதி Lotte New York Palace ஹோட்டலில் சிறப்பு இரவு விருந்து வழங்கினார். இதில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் கலந்து கொண்டார்.
இதன்போது, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அமோகமாக வரவேற்றதுடன், சிநேகபூர்வ உரையாடலின் பின்னர் இரு அரச தலைவர்களும் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply