அமெரிக்காவில் வேகமாக பரவும் கொரோனா வைரஸ்: 2 மாகாணங்களில் அவசர நிலை பிரகடனம்

சீனாவில் உருவான உயிர்க்கொல்லி நோயான கொரோனா வைரஸ் தற்போது உலகநாடுகளை அச்சுறுத்தி வருகிறது. சீனாவை தவிர்த்து இதுவரை 72 நாடுகளில் சுமார் 11 ஆயிரம் பேர் கொரோனா தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளனர்.
இந்த நோயிக்கு இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாத சூழ்நிலையில் நோய் பரவலை தடுக்க உலக நாடுகள் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
எனினும் இந்த கொடிய நோய் உலகம் முழுவதும் உயிர் பலிகளை ஏற்படுத்தி வருகிறது. இதில் சீனாவுக்கு அடுத்தப் படியாக அதிக பட்சமாக இத்தாலியில் 100-க்கும் மேற்பட்டோரும், ஈரானில் 92 பேரும் பலியாகி இருக்கிறார்கள்.
இதனிடையே கொரோனா வைரஸ் அமெரிக்காவிலும் வேகமாக பரவி வருகிறது. அந்த நாட்டின் 16 மாகாணங்களில் கொரோனா பரவியிருக்கும் சூழலில் உயிர் பலி தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply