குறைந்த அளவினருக்கே ஹஜ் வாய்ப்பு : ஜூலை 29 ஆம் தேதி தொடங்குகிறது

அரபு வளைகுடா நாடுகளில் இதுவரை 253,349 கொரோனா பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது, 2,523 பேர் கொரோனாவால் மரணமடைந்து உள்ளனர்.கடந்த மாதம், சவுதி அரேபியா ஒரு “மிகக் குறைந்த” ஹஜ் செய்ய குறைந்த நபர்களை மட்டுமே அனுமதிப்பதாக அறிவிதத்து. நாடு கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் எழுச்சியை எதிர்த்துப் போராடுவதால் அரசியல் மற்றும் பொருளாதார அபாயங்கள் நிறைந்த ஒரு முடிவாக கூறப்பட்டது.
ஹஜ் யாத்திரை ஏற்கனவே ராஜ்யத்தில் இருக்கும் 1,000 பேருக்கும், அவர்களில் 70 சதவீதம் பேர் வெளிநாட்டினருக்கும், மீதமுள்ள சவுதிகளுக்கும் மட்டுமே என்று ஹஜ் அதிகாரிகள் கூறியிருந்தாலும், சில பத்திரிகை அறிக்கைகள் 10,000 பேர் பங்கேற்கக்கூடும் என்று கூறியுள்ளன.
சவுதி அரேபியா ஒரு கொரோனா வைரஸ் பரவுவதை எதிர்த்துப் போராடுவதால் சுமார் 1,000 முஸ்லீம் யாத்ரீகர்களை மட்டுமே ஹஜ் செய்ய அனுமதி அளித்துள்ளது. இந்த ஹஜ் ஜூலை 29 ஆம் தேதி தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
சவுதி அரேபியாவுக்கு வெளியில் இருந்து வரும் ஹஜ் பயணிகளை விலக்குவதற்கான முடிவு நாட்டின் நவீன வரலாற்றில் முதன்மையானது மற்றும் உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களிடையே ஏமாற்றத்தைத் ஏற்படுத்தி உள்ளது, இருப்பினும் தொற்றுநோய் காரணமாக இது அவசியம் என்று பலர் ஏற்றுக்கொண்டு உள்ளனர்.
மக்காவுக்கு வருவதற்கு முன்னர் யாத்ரீகர்கள் கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள், ஹஜ்ஜிற்கு பிறகு வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
சவுதியை தளமாகக் கொண்ட முஸ்லீம் உலக லீக் மற்றும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு ஆகியவை யாத்ரீகர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பிற்கான அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு ஆதரவளித்துள்ளன.
அரசாங்க புள்ளிவிவரங்களின்படி, ஹஜ் பயணம் மூலம் ஒவ்வொரு ஆண்டும் சவுதி பொருளாதாரம் 12 பில்லியன் டாலர்களை ஈட்டுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply