தலையில்லா சடலம் 30 வயது பெண், கொலை செய்த பொலிஸ் எஸ்ஐ தற்கொலை

கொழும்பு – டாம் வீதி, ஐந்துலாம்பு சந்தி பகுதியில் பயணப் பையில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண் குருவிட்டை – தெப்பனாவ பகுதியைச் சேர்ந்த 30 வயதானவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சடலத்தின் தலைப்பகுதி இல்லாதமையால், மரபணு பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த கொலைச் சம்பத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான, விடுமுறையிலிருந்த புத்தல பொலிஸ் நிலையத்தின் உப​ பொலிஸ் இன்ஸ்பெக்டரே அடையாளங் காணப்பட்டுள்ளதுடன், அவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித ரோஹன கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply