உலகளவில் கொரோனா வைரஸ் பலி 28½ லட்சத்தை தாண்டியது
உலகளவில் கொரோனா வைரசால் பலியானவர்கள் எண்ணிக்கை 28½ லட்சத்தை தாண்டியது. நேற்று ஒரே நாளில் 10 ஆயிரத்து 382 பேர் உயிரிழந்தனர்.அதேபோல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13.08 கோடியாக உயர்ந்தது. புதிதாக 6.37 லட்சம் பேர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
இதில் 10.52 கோடி பேர் குணம் அடைந்துள்ளனர். 2.26 கோடி பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். பிரேசிலில் நேற்று ஒரே நாளில் 2807 பேர் உயிரிழந்துள்ளனர். புதிதாக 69 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவிலும் தொடர்ந்து பாதிப்பு இருந்து வருகிறது. அங்கு நேற்று 1000 பேர் பலியாகி உள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply