நீதிமன்ற நடவடிக்கைக்கு வரையறை : சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட மாட்டார்கள்
நீதிமன்ற நடவடிக்கைக்கு வரையறை விதிக்கப்பட்டிருக்கும் காலப்பகுதியில் சந்தேக நபர்கள் மற்றும் குற்றம்சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட மாட்டார்கள் என நீதியமைச்சின் சிரேஷ்ட ஆலோசகர் ஜனாதிபதி சட்டத்தரணி யூ.ஆர்.டி சில்வா தெரிவித்துள்ளார்.
நீதிச்சேவை ஆணைக்குழு இது குறித்த சுற்றுநிருபம் ஒன்றை வெளியிட்டுள்ளது.அத்தியாவசிய வழக்குகள் மாத்திரம் குறித்த காலப்பகுதியில் விசாரணை செய்யப்படும். ஏனைய வழக்குகள் ஒத்திவைக்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply