இப்படி சாப்பிட்டால்தான் கொரோனா தாக்காது : ரயில் பயணிகளை மிரள வைத்த சீனப் பெண்

சீனாவின் ரயிலில் பயணித்த ஒரு பெண், தனது முகத்தை பிளாஸ்டிக் பையால் மூடிக்கொண்டு, வாழைப்பழத்தை சாப்பிடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த, ரயிலில் பயணிக்கும் போதும், பொது இடங்களிலும் மக்கள் எதையும் சாப்பிட கூடாது என உத்தரவிடப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில், ரயிலில் பயணித்த ஒரு பெண், வாழைப்பழத்தை சாப்பிடுவதால், தொற்று பரவாமல் இருக்கும் உத்தரவை மீறாமல் இருக்கவும், தனது முகத்தை பிளாஸ்டிக் பையால் மூடிக்கொண்டுள்ளார். சக பயணிகள் இதை வினோதமாக பார்த்தனர். இவர் முகத்தை மூடிக்கொண்டு பழத்தை சாப்பிடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்தப் பெண் சீனாவின் ஹுபேய் மாகாணத்தில் பயணம் செய்ததாக தெரியவந்துள்ளது. சுரங்கப்பாதை ரயிலில் அவர் பயணித்தபோது வாழைப்பழம் சாப்பிடும்போது சக பயணி ஒருவர் தனது செல்போனில் பதிவு செய்து வெளியிட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply