தான் உரையாற்றுவதற்கு எதிர்க்கட்சித்தலைவர் நேரம் ஒதுக்குகிறார் இல்லை : அர்ச்சுனா

தான் உரையாற்றுவதற்கு எதிர்க்கட்சித்தலைவர் நேரம் ஒதுக்குகிறார் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தபோது,

நான் யாழ் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறேன். யாழ் மாவட்டத்தை எடுத்துக்கொண்டால் மூன்று உறுப்பினர்கள்ஜே.வி.பியைசேர்ந்தவர்கள்.நானும் இங்கு பேசவேண்டும். எனக்கும் இங்கு சந்தர்ப்பம் வழங்கப்படவேண்டும்.

எதிர்க்கட்சி தலைவர் மற்றும் அவருடைய குழு இரண்டு நிமிடங்கள் கூட நான் பேச ஒதுக்குகிறார்கள் இல்லை.நான் எதிர்கட்சித் தலைவரின் அலுவலகத்துக்கு இந்த வேளையில் போகமுடியாது.

ஒவ்வொரு உரைக்கும் எனக்கு 30 செக்கன்களாவது வழங்கப்படவேண்டும்.நான் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் குறைகளை நான் இங்கே கூறவேண்டும் எனத் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply