கல்கிஸ்சையில் துப்பாக்கிச் சூடு 19 வயதுடைய இளைஞன் பலி
கல்கிஸ்சை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்கிஸ்சை கடற்கரை வீதி சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை (05) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் தெஹிவளை, ஓர்பன் பிளேஸ் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் என தெரியவந்துள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த நபர் களுபோவிலவில் உள்ள கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மேலும், இந்த சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply