வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட நபர் கைது
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணத்தை மோசடி செய்த சந்தேக நபர் ஒருவர் கொழும்பு மத்திய பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகளால் தாரேகுளம் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் கொழும்பு 15 ஐச் சேர்ந்த 41 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
குறித்த சந்தேகநபர் கொரியாவில் வேலைகளை வாங்கித் தருவதாகக் கூறி 150 பேரிடம் இருந்து சுமார் 15 கோடிக்கும் அதிகமாக மோசடி செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபரிடமிருந்து ஒரு ஜீப் வண்டி , ஒரு காணிக்கான வழக்கறிஞர் உரிமம் மற்றும் இரண்டு கையடக்கத்தொலைபேசிகள் என்பன பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் குறித்து கொழும்பு மத்திய பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply