அமெரிக்காவில் பாடசாலை மாணவன் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவின் ஹூஸ்டன் பகுதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவின் வடக்கு மகாணமாக மிசிசிப்பிலுள்ள லேலேண்ட் கிராமத்தில் அரசு பள்ளிக்கூடத்தில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டவர்கள் படித்து வருகிறார்கள்.

இந்தநிலையில் பள்ளி மைதானத்தில் பள்ளிகளுக்கு இடையேயான கால்பந்தாட்ட போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இதனால் பள்ளி மைதானத்தில் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் உள்பட ஏராளமானவர்கள் குவிந்து இருந்தனர்.

இந்த நிலையில் மைதானத்திற்குள் புகுந்த 18 வயது இளைஞர் ஒருவர் தான் மறைந்து வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு சரமாரியாக சுட தொடங்கினான்.

கண்மூடித்தனமாக நடந்த இந்த தாக்குதலில் பள்ளி மாணவர்கள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.

படுகாயம் அடைந்த 12 பேர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பியோடிய சிறுவனை பொலிஸார் தேடி வருகிறார்கள்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply