சர்வதேச அழுத்தம் காரணமாகவே பொன்சேகா விடுதலை செய்யப்பட்டார் : சரத் என் சில்வா
சர்வதேச ரீதியான அழுத்தங்கள் காரணமாகவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விடுதலை செய்ததாக முன்னாள் நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.சர்வதேச அழுத்தம் மற்றும் ஒக்ரோபர் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் கால அடிப்படையிலான மீளாய்வு ஆகிய காரணிகளின் அடிப்படையிலேயே இந்த பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சரத் பொன்சேகாவை அமெரிக்கா அரசியல் கைதியாக அடையாளப்படுத்தியதனைத் தொடர்ந்து இலங்கை மீதான மனித உரிமை மீறல் அழுத்தங்கள் வலுப்பெற்றதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சரத் பொன்சேகாவிற்கு முழுயைமான பொது மன்னிப்பு வழங்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
சரத் பொன்சேகா கைது மற்றும் சிறைத் தண்டனை தெளிவான மனித உரிமை மீறலாகவே கருதப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply