பஹ்ரேயினில் இலங்கை, இந்திய பணியாளர்கள் தொழிலுக்கு திரும்பினர்

வேதன உயர்வு கோர பஹ்ரேயினில் தொழிற்பகிஸ்கரிப்பு போராட்டத்தை நடத்திய சுமார் 1500 இலங்கை மற்றும் இந்திய பணியாளர்கள் தொழிலுக்கு திரும்பியுள்ளனர்.

அங்குள்ள தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றிய அவர்கள், தங்களுக்கு 10 பஹ்ரெய்ன் டினார் வேதன அதிகரிப்பு வழங்க வேண்டும் என கோரி இருந்தனர்.

எனினும் இதற்கு நிறுவனம் மறுப்பு தெரிவித்து வந்தது.

இதனைத் தொடர்ந்து நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது, 5 டினார் வேதன அதிகரிப்புக்கு இரு தரப்புக்கும் இடையில் இணக்கம் காணப்பட்டது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply