கனடாவில் இளையராஜாவின் நிகழ்ச்சி நடப்பது உறுதி
தமிழர்கள் எதிர்ப்பு மற்றும் புயல் காரணமாக, இளையராஜாவின் கனடா இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது என்று செய்திகள் வெளியாகின. இந்நிலையில் கனடாவில் நடக்கவிருக்கும் நிகழ்ச்சி தொடர்பாளர் தருமி, , ‘’நிகழ்ச்சி ரத்து ஆகவில்லை. நிகழ்ச்சியில் பங்கேற்போரில் 60 சதவிகிதம் பேர் கனடா வந்துவிட்டனர். இளையராஜா மட்டும் வரவில்லை. அவரும் வருவதற்கு தயார் நிலையில் உள்ளார். வரும் நவம்பர் 3ம் திகதி நிகழ்ச்சி நடைபெறப்போவது உறுதி. இதில் எந்த மாற்றமும் இல்லை. அமெரிக்க சாண்டிபுயலால் கனடாவிற்கு எந்த ஆபத்தும் இல்லை’’ என்று கூறினார்.
அவர் மேலும், நிகழ்ச்சி நடப்பதை கனடா மக்கள் வரவேற்கிறார்கள். எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. சிலர்தான் அரசியல் நடத்துகிறார்கள் என்று ஆவேசமாக கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply