ஜனாதிபதி – ஆஸி. வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு
இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பொப் கார், இன்று முற்பகல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடினார். அலரி மாளிகையில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது, சட்டவிரோத குடியேற்றம், இரண்டு நாடுகளுக்குமிடையிலான பொருளாதார உறவு உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.
இந்த சந்திப்பில் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், வெளிவிவகாரச் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம மற்றும் ஜனாதிபதி செயலக ஊடகப் பேச்சாளர் மொஹான் சமரவிக்கிரம ஆகியோரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply