கூட்டு ஒப்பந்தம் தொழிலாளர்களை விட முதலாளிமாருக்கே நன்மை பயப்பதாகவுள்ளது : சந்திரசேகரன்
கூட்டு ஒப்பந்தம் தொழிலாளர்களுக்கு நன்மை பயப்பதற்கு பதிலாக முதலாளிமாருக்கே நன்மை பயப்பதாக மாறியுள்ளது என அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.பண்டாரவளை பிரதேசங்களில் இடம்பெற்ற சங்கத்தின் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து கூறியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.இந்த நாட்டின் முதுகெலும்பாய் இருக்கும் தோட்டத் தொழிலாளர்களுக்கு மாதச் சம்பளம் வழங்கப்பட வேண்டும். இந்த நாட்டில் பொதுவாக அநேகமான பிரிவுகளில் தொழில் புரிபவர்களுக்கு மாதச் சம்பளம் வழங்கப்படும் போது ஏன் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்க முடியாது.
தோட்டத்தொழிலாளர்கள் இன்று பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். அன்றாட வாழ்க்கையை கொண்டு செல்லக்கூடிய சூழ்நிலை கூட இல்லாமல் போயுள்ளது. அவர்கள் வாழும் வீடுகள் கூட இன்றும் சொந்தமாக்கப்படவில்லை.
இந்நிலையில் கூட்டு ஒப்பம் நன்மை பயப்பதற்கு பதிலாக பாரிய பின்னடைவுகளையே தொழிலாளர்களுக்கு ஏற்படுத்தி வருகின்றது. கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் முதலாளிகளே கூடதல் நன்மையடைந்துள்ளனர்.
புதுப்பிக்க இருக்கும் கூட்டு ஒப்பந்தத்தில் கூடதலான மாதச்சம்பளம் வழங்க முதலாளிமார் சம்மேளனத்துக்கு அனைவரும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply