ஊடக ஒழுக்க விதிகள் விரைவில் அறிமுகம் – அமைச்சர் கெஹலிய

ஊடக ஒழுக்க விதிகள் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் ஊடக ஒழுக்கக் கோவை பாராளுமன்றில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். உத்தேச வரைவுத் திட்டம் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்த உத்தேச திருத்தச் சட்டம் பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் கட்சிகள் மற்றும் ஏனைய தரப்பினரிடமும் இது குறித்த தகவல்கள் திரட்டப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். அண்மைக்காலமாக சில ஊடகங்களின் செயற்பாடுகள் சிக்கல்களை தோற்றுவித்துள்ளதாகக் குறிப்பிட்டு;ளளார்.

எனவே இவ்வாறான ஒழுக்கக் கோவையொன்றை வகுப்பது மிகவும் அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டு மக்களுக்கும் சமூகத்திற்கும் பாதகம் ஏற்படக் கூடிய வகையில் ஊடகங்கள் செயற்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply