அண்டார்டிகா கடலில் ஐஸ்கட்டிகள் உருகும் அபாயம்

உலகம் வெப்ப மயமாவதால் அண்டார்டிகா கடலில் உள்ள ஐஸ் கட்டிகள் உருகுகின்றன. இவற்றின் மேற்பரப்பில் இருக்கும் ஐஸ் கட்டிகள் உருகுவதாக முன்பு தெரிவிக்கப்பட்டன. தற்போது, கடலின் அடிப்பகுதியில் படிந்து கிடக்கும் பனிப்பாறைகள் அதிக அளவில் உருகுவதாக தகவல் வெளியாகி உள்ளது.கலிபோர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானி எரிக் ரிக்னாட் குழுவினர் நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. கடந்த 2003-ம் ஆண்டில் இருந்து 2008-ம் ஆண்டு வரை சராசரியாக 1325 லட்சம் கோடி கிலோ ஐஸ் கட்டிகள் உருகியுள்ளன. அதே நேரத்தில் 1,100 லட்சம் கோடி கிலோ ஐஸ் கட்டிகள் புதிதாக உருவாகியுள்ளது.

அண்டார்டிகா கடலின் ஆழமான பகுதியில் 3 மிகப்பெரிய ராட்சத ஐஸ் கட்டிகள் உருகியுள்ளன. அவை முழுமையான அண்டார்டிகாவின் மூன்றில் 2 மடங்காகும். ஆனால் கடலின் மேற்பரப்பில் 15 சதவீதம் ஐஸ் கட்டிகள் மட்டுமே உருகியுள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply