தேசத்துரோகமான செயற்பாடு ஸ்ரீதரன் எம்.பியை கைது செய்க : பொதுபல சேன
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் தேச துரோகத்தில் ஈடுபட்டதாகவும் அவரை உடனடியாகக் கைது செய்யுமாறும் தீவிரவாத பெளத்த அமைப்பான பொதுபல சேனா கோரிக்கை விடுத்துள்ளது. கிருலப்பனையிலுள்ள பொதுபல சேனாவின் தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தேஞானசார தேரர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவு செய்யப்பட்டமை தொடக்கம் பாராளமன்றில் ஸ்ரீதரன் எம்.பி. புலிகளின் தலைவர் பிரபாகரனைப் புகழ்ந்து உரையாற்றியமை வரை சர்வதேசத்தின் திட்டப்படியே காய் நகர்த்தப்படுகின்றன.
சிங்களவர்களின் உரிமைகளுக்காகவும் சுதந்திரத்திற்காகவும் மீண்டும் ஒரு முறை போராட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply