சீனாவில் 11 மாணவிகளை கற்பழித்த ஆசிரியருக்கு தூக்கு

சீனாவில் தொடக்கப்பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் கோயா டோஷெங். இவருக்கு வயது 59. கடந்த 2012ம் ஆண்டு இவர் வுகு நகரில் உள்ள பள்ளியில் 14 வயதுக்குட்பட்ட 11 சிறுமிகளை கற்பழித்துள்ளார். இவ்வழக்கு மீதான விசாரணை நேற்று சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ஈவிரக்கமற்ற செயலில் ஈடுபட்ட அந்த ஆசிரியருக்கு மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்தது. மேலும் இது போன்ற செயல்களில் ஈடுபடும் ஆசிரியர்களின் நடத்தைக்கு கண்டனம் தெரிவித்தது. மேலும் பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டது.

இதுபோன்று குற்றச்செயலில் ஈடுபட்ட 56 வயதான மற்றொரு பள்ளி ஆசிரியர் யாங் ஷிபுவிற்கும் கடந்த திங்களன்று மரணதண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply