தொடர்ந்து 12 மணி நேரம் வான் வெளித் தாக்குதல்: தெற்கு ஏமனில் 92 பேர் பலி

ஏமனில் நடைபெறும் உள்நாட்டு போர் கடந்த மார்ச் 19–ந் தேதி முதல் தீவிரம் அடைந்துள்ளது. அரசுக்கு எதிராக போரிடும் ஹவுத்தி கிளர்ச்சி படையை ஒடுக்க சவுதி அரேபியாவும் அதன் நட்பு நாடுகளும் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு ஹவுத்தி கிளர்ச்சியாளர்களும் எதிர் தாக்குதல் நடத்துகின்றனர். இதனால் உயிர்ச்சேதம், பொருட்சேதமும் பெருமளவில் ஏற்படுகிறது. இந்நிலையில் நேற்று ஏமன் நாட்டில் ஹவுத்தி கிளர்ச்சிப் படையினருக்கெதிராக சவுதி அரசு தொடர்ந்து 12 மணி நேரம் நடத்திய வான் வெளித் தாக்குதலினால், ஏடன் துறைமுக நகரம் மற்றும் லாஜ் மாகாணத்தில் மட்டும் 42 ஹவுத்தி கிளர்ச்சியாளர்களும், மற்ற தென் ஏடன் நகர்களில் 38 ஹவுத்தி கிளர்ச்சியாளர்களும் கொல்லப்பட்டதாக அரசு படைகள் அறிவித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply