கோத்தபாயவிடம் 6 மணி நேரம் விசாரணை
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிடம் ஜனாதிபதி ஆணைக்குழு சுமார் 6 மணிநேரம் விசாரணை நடத்தியுள்ளது. பாரிய
மோசடிகள், ஊழல், அரச வளங்கள், சிறப்புரிமை, அதிகாரம் போன்றவற்றை தவறாக பயன்படுத்தியமை தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக இந்த ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இயங்கும் ஆணைக்குழுவில் கோத்தபாய ராஜபக்ச ஆஜராகினார். விசாரணைகளின் பின்னர், அங்கிருந்து வெளியேறிய அவரிடம் எது குறித்து விசாரணை நடத்தப்பட்ட என ஊடகவியலாளர்கள் கேட்டனர்.
ரக்னா லங்கா நிறுவனம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். ரக்னா லங்கா நிறுவனம் ஓய்வுபெற்ற மற்றும் இராணுவத்தில் இருந்து விலகியவர்களை கொண்ட ஒரு நிறுவனமாகும். தற்போது உங்களுக்கு செய்திகள் இல்லைதானே எனவும் கோத்தபாய கூறினார்.
விசாரணைகளில் நீங்கள் என்ன கூறினீர்கள் என ஊடகவியலாளர்கள் கேட்டனர். அவற்றை கூறுவது சரியல்ல. அவை தேவையில்லை எனக் கூறிக்கொண்ட கோத்தபாய தனது வாகனத்தை நோக்கி நடந்து சென்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply