கோத்தாவை கைது செய்ய முடியாது நீதி அமைச்சர் விஜேயதாஸ தெரிவிப்பு

viyadasa“எவன்கார்ட்” விவ­கா­ரத்தைப் பயன்­ப­டுத்தி கோத்­த­பாய ராஜ­ப­க்ஷவை கைதுசெய்ய முடி­யாது என நீதி­ய­மைச்சர் விஜேய­தாஸ ராஜ­பக்ஷ தெரிவித்துள்ளார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை இடம்­பெற்ற எவன்கார்ட் தொடர்­பான சபை ஒத்­திவைப்பு kottaவேளை பிரே­ரணை மீதான விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே நீதி­ய­மைச்சர் விஜேய­தாஸ ராஜ­பக்ஷ மேற்கண்டவாறு தெரி­வித்தார்.

 

அமைச்சர் சபையில் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்;

எவன்கார்ட் நிறு­வ­னத்­திற்கு எதி­ராக வெடி­மருந்­துகள், கொள்கலன்கள் விவகாரம் தொடர்பில் பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் வழக்கு தொடர முடி­யாது என சட்­டமா அதிபர் திணைக்­களம் அறி­வி­த்தது. சட்­டமா அதி­பரும் தெரி­வித்தார்.

 

பொலிஸார் விசா­­ரித்து குற்­றங்கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்டு விசா­ர­ணைகள் நடத்­தப்­பட்டால் தான் குற்­ற­வியல் தண்­ட­னையின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யமுடியும்.

 

எவன்கார்ட் மிதக்கும் கப்பல் ஐ.நா.பிர­க­ட­னங்­க­ளுக்கு அமை­யவே ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. எனவே இதில் எவ்­வி­த­மான குற்றவியல் காரணங்களும் கிடை­யாது.

 

எவன்கார்ட் விடயம் தொடர்பில் 3000 ஆவ­ணங்­களை ஆராய்ந்தே தீர்­மா­னங்கள் எடுக்­கப்­பட்­டன. சட்ட ரீதி­யா­கவே அனைத்தும் இடம்­பெற்­றன. நான் சட்­டத்­த­ரணி என்ற ரீதியில் இதனை அறிவேன். ஆனால் இது தொடர்பில் சட்­டமே தெரியாவர்கள் கருத்­துக்­களை வெளியி­டு­கின்­றனர். சிலர் இவ்­வி­ட­யத்தைப் பயன்­ப­டுத்தி கோத்­தா­பாய ராஜ­ப­க்ஷவை கைது செய்­வ­தற்­கான முயற்சி­களை முன்­னெ­டுத்­தனர். இதனை நான் எதிர்த்தேன்.

 

அவருடன் அர­சி­யல் ரீதி­யான கருத்து வேறு­பா­டுகள் இருக்­கலாம். ஆனால் சட்­டத்தின் பிர­காரம் சரி­யான தீர்­மா­னத்­தையே எடுக்க வேண்டும். இதனை நான் ஜனா­தி­ப­தி­யி­டமும், பிர­த­ம­ரி­டமும் தெளி­வு­ப­டுத்­தினேன். இதன்­போது இரு­வரும் சட்டத்தின் பிரகாரம் அனைத்தையும் மேற்கொள்ளுமாறு என்னிடம் தெரிவித்தனர்.

 

எமது ஆட்சியில் எவரையும் பழிவாங்கும் நோக்கமில்லை. கடந்த காலங்களில் நீதியில்லாத நிலைமை காணப்பட்ட நாட்டில் இன்று நீதியும் சட்டமும் நிலைநிறுத்தப்பட்டு வருகின்றன.. இதனை சீர்குலைக்க வேண்டாம் என அவர் மேலும் தெரிவித்தார்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply