நின்று கொண்டிருந்த விமானம் மீது மோதிய பேருந்து: கொல்கத்தா விமான நிலையத்தில் பரபரப்பு

busd0-47c1-af28-c9ff42142cd0_S_secvpfகொல்கத்தா விமான நிலையத்தில் நின்று கொண்டிருந்த விமானத்தின் மீது பயணிகள் பேருந்து மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. விமான நிலையத்தில் விமானம் உள்ள இடம் வரை பேருந்து ஒன்றில் பயணிகள் செல்வது வழக்கம். அப்படி கொல்கத்தா விமானத்தில் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று நின்று கொண்டிருந்த விமானத்தின் மீது மோதியது. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் பேருந்து விமானத்தின் மீது மோதியதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் பயணிகளுக்கு காயம் ஏதும் இல்லை என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் அதிகாரிகள் கூறினர். நின்று கொண்டிருந்த விமானம் மீது பேருந்து மோதியதால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply