சாவகச்சேரி வெடிபொருட்கள் புதியவை : மகிந்த ராஜபக்ஷ

MAHINDAயாழ், சாவகச்சேரியில் அண்மையில் மீட்கப்பட்ட வெடி பொருட்கள் தொடர்பான உண்மையை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். உண்மையை வெளியிடுவது நல்லிணக்கத்திற்கு தடையல்ல எனவும் அவர் கூறியுள்ளார். அநுராதபுரம் புல்னேவ பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

இதற்கு முன்னரும் இப்படியான வெடிபொருட்கள் மீட்கப்பட்டன. எனினும் இந்த விதமாக வதந்திகள் பரவவில்லை.

 

தற்கொலை அங்கி, சில குண்டுகள், தோட்டக்கள் மீட்கப்பட்டன. தோட்டாக்கள் இருந்தால், துப்பாக்கி இருந்திருக்க வேண்டும். ஏன் துப்பாக்கியை மறைத்தனர் என்பது எனக்கு தெரியாது.

 

உண்மையை கூறாதவரை மக்கள் இது பற்றி பலவற்றை சிந்திக்க முடியும். மீட்கப்பட்ட வெடிபொருட்கள் பழையவை என சிலர் கூறுகின்றனர். மேலும் சிலர் அவை புதியவை எனக் கூறுகின்றனர். எனக்கு கிடைத்துள்ள தகவல்களின்படி அவை புதியவை என்பது தெளிவாகியுள்ளது.

 

உண்மை என்னவென்று தெரியாவிட்டாலும் எனக்கு கிடைத்த தகவல்கள் உண்மையானவை என்றார்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply